திமுக ஆட்சி அமைந்தது முதல் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெல்டா மாவட்டத்தில், இதுபோன்ற சம்பவங்களால், பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில், தஞ்சாவூரில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் ஒரு சிறுவனும், அவரது குடும்பத்தினரும் வெளியே வரும் போது, அங்கு வேகமாக வந்த இரண்டு முகமூடி அணிந்த நபர்கள், சிறுவனையும், அந்த குடும்பத்தில் உள்ளவர்களையும் நெட்டி உள்ளே தள்ளி, அவர்களது கழுத்தில் இருந்த தங்க ஜெயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைகின்றனர்.
போதாகுறைக்கு, கதவில் தங்களது கைரேகை பட்டுள்ளதை லேட்டாக அறிந்து, மீண்டும் ஓடி வந்து கதவுகளில் பட்டுள்ள தங்களது கைரேகைகளைத் துணியால் அழித்துவிட்டு மீண்டும் மறைகின்றனர்.
கொள்ளையர்கள் மேல் சட்டை அணியாமல், இடுப்பில் மட்டும் வேஷ்டி கட்டியுள்ளனர். மேலும், முகத்தை மறைத்து துணியால் கட்டியுள்ளனர். இதனால், கொள்ளயர்களின் முகம் தெரியாமல் போய்விட்டது. இது தொடர்பான வீடியோக் காட்சி சமூக வலைதங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.