மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உத்தரகாசி சுரங்க மீட்பு பணி குறித்து விவாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதுதொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அப்போது பிரதமர் மோடி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது கூட, உத்தரகாசி மீட்புப்பணி குறித்து நாள்தோறும் இரு முறை உத்தரகாண்ட் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பிரதமர் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற முழு அரசு எந்திரமும் தீவிர முயற்சி மேற்கொண்டதாகவும் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.