தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண முடியும்! - அண்ணாமலை
Aug 19, 2025, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண முடியும்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Dec 7, 2023, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் 15 ஆண்டுகளாக மழை வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளதாகவும்,  வெள்ள பிரச்சனைக்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் தீர்வு காண முடியும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரனை மற்றும் வட சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் வீடு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்படுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையான உணவு, தண்ணீர், பால் போன்றவை கிடைக்காமல் அவதி அடையும் நிலையும் உள்ளது.

இந்தநிலையில் வேளச்சேரி, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். தொடர்ந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மேலும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை அண்ணாமலை வழங்கினார்.

இதனை தொடர்ந்து சென்னை மாதவரம் பகுதியில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக பாஜகவின் மாவட்ட மாநில நிர்வாகிகளுடன், நமது மாநிலத் தலைவர் அண்ணாமலை நிவாரண பொருட்களை வழங்கி அவர்களுடன் உரையாடினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

சென்னையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். மக்களுக்கான அடிப்படை தேவையாக தண்ணீர் தான் உள்ளது.  சென்னையில் தேங்கிய மழை நீரில் கிட்டத்தட்ட 70% வடிந்துவிட்டது.

இன்னும் 30% தான் மழை நீர் தேங்கியுள்ளது. நாளைக்குள் அதுவும் மீண்டுவிடும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மேலும்  தண்ணீர் தேங்கியுள்ள பகுதிக்கு மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டித்து வைத்துள்ளனர். எனவே இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இந்த நேரத்தில் மக்கள் தைரியமாக இருக்க வேண்டும்.

கடந்த 4 நாட்களாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும், முன் களப்பணியாளர்களும் தொடர்ந்து களத்தில் இருக்கிறார்கள்.

சென்னை மக்கள் அதிகாரிகளை நம்புகிறார்கள் ஆனால் அரசியல்வாதிகளை நம்ப தயாராக இல்லை. எனவே அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். திட்டங்களை சரியான முறையில் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

15 ஆண்டுகளாக சென்னையில் மழை வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தார்.

Tags: bjp k annamalaichennai flood
ShareTweetSendShare
Previous Post

சென்னை வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறார் ராஜ்நாத்சிங்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 67.70 அடியாக அதிகரிப்பு!

Related News

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies