கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை! - அமித் ஷா
Mar 15, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை! – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தேர்தல் செயல்முறையை சீர்திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாநிலங்களவையில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்  அமித் ஷா தெரித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்  அமித் ஷா,

இதற்காக தற்போதுள்ள சட்டங்களுக்கு துணையாகவும், தொண்ணூற்றி ஏழாவது அரசியலமைப்பு திருத்தத்தின் விதிகளை இணைப்பதன் மூலமும் முறையே 03.08.2023 மற்றும் 04.08.2023 அன்று பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (எம்.எஸ்.சி.எஸ்) திருத்தச் சட்டம் மற்றும் விதிகள் – 2023 அறிவிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ளன.

கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், அதில் நிதி முறைகேடுகளைத் தடுக்கவும் மேற்கண்ட திருத்தத்தின் மூலம் பல விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:-

•    பல மாநில கூட்டுறவு சங்கங்களில் தேர்தல்களை சரியான நேரத்தில், முறையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதை உறுதி செய்வதற்காக, கூட்டுறவு தேர்தல் ஆணையம் என்ற முறை சேர்க்கப்பட்டுள்ளது.

•    உறுப்பினர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான செயல்முறையை வழங்குவதற்காக மத்திய அரசால் கூட்டுறவு குறைதீர்ப்பாளர் நியமிக்கப்படுவார்

•    வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் வகையில், உறுப்பினர்களுக்குத் தகவல் வழங்க பல மாநிலக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தகவல் அலுவலர் நியமனம் செய்யப்படுவார்

•    மத்திய பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளர்கள் குழுவிடமிருந்து 500 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் மற்றும் வைப்புத் தொகை கொண்ட பல மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு ஒரே நேரத்தில் தணிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மோசடி அல்லது முறைகேடுகள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்டறிந்து, அதற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

•    வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்காக தலைமை பல மாநில கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும்.

•    கணக்கியல் மற்றும் தணிக்கையில் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக பல மாநில கூட்டுறவு சங்கங்களுக்கான கணக்கியல் மற்றும் தணிக்கை தரநிலைகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

•    பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் ஜனநாயக ரீதியான முடிவுகளை எடுப்பதை மேம்படுத்தும் வகையில், வாரியக் கூட்டங்களுக்கு கோரம் எண்ணிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags: Amith shaCentral Minister
ShareTweetSendShare
Previous Post

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைஇடையே ஒருங்கிணைப்பு!

Next Post

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி: பா.ஜ.க. எம்.பி.க்கள் ராஜினாமா!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies