சர்வதேச அழைப்புகளுக்கு தடை - பிராடுகளுக்கு ஆப்பு!
Aug 15, 2025, 06:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச அழைப்புகளுக்கு தடை – பிராடுகளுக்கு ஆப்பு!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-24 நிதியாண்டில் 65 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக  என்று மத்திய இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதால், 2023-24 நிதியாண்டில் 65 தொலைத்தொடர்பு அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் போலியான இந்திய எண்களைப் பயன்படுத்தி சர்வதேச அழைப்புகளைச் செய்ய அனுமதித்தவை ஆகும்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

இதுவரை, 2023-24 நிதியாண்டில் 65 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பும், 2022-23 நிதியாண்டில், 2021-2022 நிதியாண்டில் 35 தொலைத்தொடர்பு அமைப்புகள் மோசடிக்கு உதவுவது கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டன” என்றும் அமைச்சரின் பதிலில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச தொலைதூர ஆபரேட்டர்களுக்கு (ILDOs) இது குறித்து தொலைத்தொடர்புத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சி.எல்.ஐ. (CLI) எனப்படும் அடையாள எண்கள் இல்லாத எண்கள், முறையற்ற சி.எல்.ஐ கொண்ட எண்கள் மற்றும் +11, 011, 11, +911, +912, +913, +914, +915 ஆகிய எண்களில் தொடங்கும் எண்கள் ஆகியவற்றில் இருந்து அழைப்புகள் வருவதைத் தடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அவர், ” தொலைத்தொடர்புத்துறை சட்ட அமலாக்க முகவர் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் (TSPs) ஒருங்கிணைந்து, சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகளைக் கண்டறிந்து வருகிறது. தேச விரோத நடவடிக்கைகள், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் இத்தகைய சட்டவிரோத அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன” என்றும் அமைச்சர் சவுகான் கூறியுள்ளார்.

மேலும் அவர், ” தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் சரிபார்ப்புக்குப் பின் இதுபோன்ற மொபைல் இணைப்புகளைத் துண்டித்து வருகின்றன. சுமார் 13.08 லட்சம் மொபைல் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன” என்றும் அமைச்சர் கூறினார்.

Tags: international callsillegal telecom organizationsUnion Minister of State Devsin Chauhancentral government
ShareTweetSendShare
Previous Post

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி: பா.ஜ.க. எம்.பி.க்கள் ராஜினாமா!

Next Post

இந்த ஆண்டின் ‘சிறந்த நபர்’ யார் ?

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies