ஹமாஸ் தலைவரை பிடிப்பது உறுதி: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!
Jul 25, 2025, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தலைவரை பிடிப்பது உறுதி: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 07:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எங்கு ஓடி ஒளிந்தாலும் ஹமாஸ் தலைவரை பிடிப்பது உறுதி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலத்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவி கண்ணில் கண்டவர்கள் அனைவரையும் சுட்டுக் கொலை செய்தனர்.

மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலில் இதுவரை காஸா நகரைச் சேர்ந்த 16,500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 35,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், பதுங்குக் குழிகள், சுரங்கப்பாதைகள் உட்பட சுமார் 2,000 இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், படைத் தளபதிகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோரை பழிதீர்த்திருக்கிறது.

இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக கடந்த மாதம் 6 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. எனினும், பிணைக் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், இஸ்ரேல் இராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வாரைப் பிடிக்கப்போவது உறுதி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஹமாஸ் தலைவர் இருப்பதாக நம்பப்படும் காஸாவின் தெற்குப் பகுதிகளைச் சுற்றி இஸ்ரேலின் படை வளைத்து விட்டது.

இஸ்ரேல் படையினர் தற்போது சின்வாரின் வீட்டைச் சுற்றி வளைத்திருக்கிறார்கள். எனினும், அங்கிருந்து அவர் எளிதாகத் தப்பி ஓடிவிடுவார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், விரைவில் அவரைப் பிடிக்கப்போவது உறுதி. அதேசமயம், காஸாவில் இருக்கும் இஸ்ரேல் பிணைக் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செஞ்சிலுவை அமைப்பினர் செய்து தர வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: WARIsraelHamasIsrael PMBenjamin netanyahu
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் இராணுவத்தின் பிடியில் காஸா முனைப்பகுதி!

Next Post

நாட்டைப் பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் விநோத திட்டம்: ரவிசங்கர் பிரசாத்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies