ஹமாஸ் தலைவரை பிடிப்பது உறுதி: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!
Apr 29, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தலைவரை பிடிப்பது உறுதி: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 7, 2023, 07:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எங்கு ஓடி ஒளிந்தாலும் ஹமாஸ் தலைவரை பிடிப்பது உறுதி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலத்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவி கண்ணில் கண்டவர்கள் அனைவரையும் சுட்டுக் கொலை செய்தனர்.

மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலில் இதுவரை காஸா நகரைச் சேர்ந்த 16,500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 35,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், பதுங்குக் குழிகள், சுரங்கப்பாதைகள் உட்பட சுமார் 2,000 இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், படைத் தளபதிகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோரை பழிதீர்த்திருக்கிறது.

இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக கடந்த மாதம் 6 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. எனினும், பிணைக் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், இஸ்ரேல் இராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வாரைப் பிடிக்கப்போவது உறுதி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஹமாஸ் தலைவர் இருப்பதாக நம்பப்படும் காஸாவின் தெற்குப் பகுதிகளைச் சுற்றி இஸ்ரேலின் படை வளைத்து விட்டது.

இஸ்ரேல் படையினர் தற்போது சின்வாரின் வீட்டைச் சுற்றி வளைத்திருக்கிறார்கள். எனினும், அங்கிருந்து அவர் எளிதாகத் தப்பி ஓடிவிடுவார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், விரைவில் அவரைப் பிடிக்கப்போவது உறுதி. அதேசமயம், காஸாவில் இருக்கும் இஸ்ரேல் பிணைக் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செஞ்சிலுவை அமைப்பினர் செய்து தர வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: WARIsraelHamasIsrael PMBenjamin netanyahu
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் இராணுவத்தின் பிடியில் காஸா முனைப்பகுதி!

Next Post

நாட்டைப் பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் விநோத திட்டம்: ரவிசங்கர் பிரசாத்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies