நாட்டைப் பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் விநோத திட்டம்: ரவிசங்கர் பிரசாத்!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டைப் பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் விநோத திட்டம்: ரவிசங்கர் பிரசாத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 7, 2023, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் தலைவர்கள் நாட்டை பிரிக்க விநோதத் திட்டம் தீட்டுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டி இருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இவற்றில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.வும் ஆட்சி செய்து வந்தன.

அதேபோல, மிசோராம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியும், தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியும் ஆட்சியில் இருந்தன. 5 மாநிலங்களிலும் பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

இந்த 5 மாநிலத் தேர்தலில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. அம்மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்றுக் கொண்டார். இவர், தேர்தலுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, “பீஹார் டி.என்.ஏ.வை விட தெலங்கானா டி.என்.ஏ. சிறந்தது” என்று கூறியிருந்தார்.

இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையானது. இந்த சூழலில், ரேவந்த் ரெட்டியின் டி.என்.ஏ. பேச்சுக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “நாட்டைப் பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் விநோத திட்டம் தீட்டுகின்றனர்.

நாட்டை வடக்கு – தெற்கு என்று பிரிக்கத் தொடங்குகின்றனர். பீஹாரின் டி.என்.ஏ.வை விட எங்கள் டி.என்.ஏ. சிறந்தது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருக்கிறார். ஆனால், இது குறித்து ராகுல் காந்தியோ, சோனியாவோ, பிரியங்காவோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரேவந்த் ரெட்டியும் தனது கருத்தை திரும்பப் பெறவில்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: Ravi Shankar PrasadCongressbjp mprevanth reddy
Share
Tweet
SendShare
Previous Post

ஹமாஸ் தலைவரை பிடிப்பது உறுதி: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

Next Post

மிசோராம் முதல்வர் நாளை பதவியேற்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies