இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா்: தகவல் கோரும் உச்ச நீதிமன்றம்!
Jan 14, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா்: தகவல் கோரும் உச்ச நீதிமன்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஸ்ஸாம் மாநிலத்தில் 1966 ஜனவரி 1-ம் தேதி முதல் 1971 மாா்ச் 25-ம் தேதி வரை இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா் எண்ணிக்கை குறித்த விவரங்களை டிசம்பர் 11-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின்போது, வங்கேதசத்திலிருந்து வெளியேறிய மக்கள் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சமடைந்தனா். இதனால், அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதையடுத்து, வெளிநாட்டினரை அடையாளம் கண்டு, அவா்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது தொடா்பாக அனைத்து அஸ்ஸாம் மாணவா்கள் சங்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அஸ்ஸாம் உடன்பாட்டை கடந்த 1985-ம் ஆண்டு மேற்கொண்டன.

அதன்படி, 1971 மாா்ச் 25-ம் தேதிக்கு முன்பாக அஸ்ஸாம் மாநிலத்துக்குள் குடியேறியவா்களுக்கு குடியுரிமை வழங்கும் பிரிவு 6ஏ குடியுரிமைச் சட்டத்தில் சோ்க்கப்பட்டது.

ஆனால், அஸ்ஸாம் மாநிலத்துக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தினரால், மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பு மற்றும் கலாச்சாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ-ன் செல்லுப்படித் தன்மையை ஆராயுமாறும் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையில், 1971 மாா்ச் 26-ம் தேதிக்குப் பிறகு அஸ்ஸாம் தவிர, எல்லையில் உள்ள பிற மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை, மத்திய அரசு ஏற்படுத்தி உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் அரசியல் சாசன அமா்வு கோரியிருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அஸ்ஸாமில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும் வங்கதேச எல்லையில் வேலி அமைக்கவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Tags: supreme courtAssamBangaladesi
ShareTweetSendShare
Previous Post

தனியார் பள்ளிகள் திறக்க தடை – தமிழக அரசு புதிய உத்தரவு!

Next Post

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் – பரபரப்பில் திண்டுக்கல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies