இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா்: தகவல் கோரும் உச்ச நீதிமன்றம்!
Oct 28, 2025, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா்: தகவல் கோரும் உச்ச நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஸ்ஸாம் மாநிலத்தில் 1966 ஜனவரி 1-ம் தேதி முதல் 1971 மாா்ச் 25-ம் தேதி வரை இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா் எண்ணிக்கை குறித்த விவரங்களை டிசம்பர் 11-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின்போது, வங்கேதசத்திலிருந்து வெளியேறிய மக்கள் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சமடைந்தனா். இதனால், அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதையடுத்து, வெளிநாட்டினரை அடையாளம் கண்டு, அவா்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது தொடா்பாக அனைத்து அஸ்ஸாம் மாணவா்கள் சங்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அஸ்ஸாம் உடன்பாட்டை கடந்த 1985-ம் ஆண்டு மேற்கொண்டன.

அதன்படி, 1971 மாா்ச் 25-ம் தேதிக்கு முன்பாக அஸ்ஸாம் மாநிலத்துக்குள் குடியேறியவா்களுக்கு குடியுரிமை வழங்கும் பிரிவு 6ஏ குடியுரிமைச் சட்டத்தில் சோ்க்கப்பட்டது.

ஆனால், அஸ்ஸாம் மாநிலத்துக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தினரால், மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பு மற்றும் கலாச்சாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ-ன் செல்லுப்படித் தன்மையை ஆராயுமாறும் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையில், 1971 மாா்ச் 26-ம் தேதிக்குப் பிறகு அஸ்ஸாம் தவிர, எல்லையில் உள்ள பிற மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை, மத்திய அரசு ஏற்படுத்தி உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் அரசியல் சாசன அமா்வு கோரியிருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அஸ்ஸாமில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும் வங்கதேச எல்லையில் வேலி அமைக்கவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Tags: supreme courtAssamBangaladesi
ShareTweetSendShare
Previous Post

தனியார் பள்ளிகள் திறக்க தடை – தமிழக அரசு புதிய உத்தரவு!

Next Post

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் – பரபரப்பில் திண்டுக்கல்!

Related News

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies