இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா்: தகவல் கோரும் உச்ச நீதிமன்றம்!
Aug 8, 2026, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா்: தகவல் கோரும் உச்ச நீதிமன்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 06:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அஸ்ஸாம் மாநிலத்தில் 1966 ஜனவரி 1-ம் தேதி முதல் 1971 மாா்ச் 25-ம் தேதி வரை இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா் எண்ணிக்கை குறித்த விவரங்களை டிசம்பர் 11-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின்போது, வங்கேதசத்திலிருந்து வெளியேறிய மக்கள் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சமடைந்தனா். இதனால், அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதையடுத்து, வெளிநாட்டினரை அடையாளம் கண்டு, அவா்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது தொடா்பாக அனைத்து அஸ்ஸாம் மாணவா்கள் சங்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அஸ்ஸாம் உடன்பாட்டை கடந்த 1985-ம் ஆண்டு மேற்கொண்டன.

அதன்படி, 1971 மாா்ச் 25-ம் தேதிக்கு முன்பாக அஸ்ஸாம் மாநிலத்துக்குள் குடியேறியவா்களுக்கு குடியுரிமை வழங்கும் பிரிவு 6ஏ குடியுரிமைச் சட்டத்தில் சோ்க்கப்பட்டது.

ஆனால், அஸ்ஸாம் மாநிலத்துக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தினரால், மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பு மற்றும் கலாச்சாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ-ன் செல்லுப்படித் தன்மையை ஆராயுமாறும் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையில், 1971 மாா்ச் 26-ம் தேதிக்குப் பிறகு அஸ்ஸாம் தவிர, எல்லையில் உள்ள பிற மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை, மத்திய அரசு ஏற்படுத்தி உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் அரசியல் சாசன அமா்வு கோரியிருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அஸ்ஸாமில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும் வங்கதேச எல்லையில் வேலி அமைக்கவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Tags: supreme courtAssamBangaladesi
Share
Tweet
SendShare
Previous Post

தனியார் பள்ளிகள் திறக்க தடை – தமிழக அரசு புதிய உத்தரவு!

Next Post

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் – பரபரப்பில் திண்டுக்கல்!

Related News

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies