மௌனம் காப்பது ஏன்? ராகுல், சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி!
Oct 26, 2025, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மௌனம் காப்பது ஏன்? ராகுல், சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் மாநில எம்.பி. அலுவலகத்தில் இருந்து 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவ்விவகாரத்தில் ராகுலும், சோனியா காந்தியும் மௌனம் காப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தீரஜ் சாஹூ. ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இவருக்குச் சொந்தமாக ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மதுபான தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த மதுபானத் தொழிற்சாலைகளில் கடந்த 6-ம் தேதி முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இச்சோதனையில் இதுவரை 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 4 நாட்களாகியும் பணம் எண்ணும் பணி இன்னும் நிறைவடையவில்லை.

நாட்டில் கைப்பற்றப்பட்டதில், இதுதான் மிகப்பெரிய கருப்புப் பணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மேற்கு டெல்லி எம்.பி. பர்வேஷ் வர்மா, டெல்லி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி, எம்.எல்.ஏ. விஜேந்திர குப்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தியுடன் தீரஜ் சாஹு கலந்துகொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கும் பா.ஜ.க.வின் அமித் மாளவியா, “உண்மையில் இந்த யாத்திரை நாட்டின் திருடர்களை ஒன்றிணைப்பதற்காகவே” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தெலங்கானா மாநில பா.ஜ.க. தலைவரும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சருமான கிஷன் ரெட்டி, “ராகுலின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான தீரஜ் சாஹூவின் அலுவலகங்களில் இருந்து, சுமார் 300 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றி இருக்கிறது.

தீரஜ் சாஹூவுக்கு எதிரான வருமான வரித்துறை சோதனைகள் குறித்து, ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் எதுவும் கேட்காமல் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். இதைப் பற்றி ராகுல் ஏன் சமூக வலைதளங்களில் எதுவும் பதிவிடவில்லை? ஏனென்றால் காங்கிரஸ் எப்போதும் ஊழலை ஆதரிக்கிறது. நீங்கள் எப்போதும் வருமான வரித்துறையை விமர்சிக்கிறீர்கள். ஆனால், இப்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Tags: rahul gandhikishan reddybjp mpattack Congress
ShareTweetSendShare
Previous Post

‘வளர்ச்சி அடைந்த இந்தியா @2047: இளைஞர்களின் குரல்’ திட்டம் நாளை தொடக்கம்!

Next Post

மத்தியப் பிரதேச முதல்வர் யார்? ஓரிரு நாளில் அறிவிப்பு: பா.ஜ.க. எம்.பி.!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies