மௌனம் காப்பது ஏன்? ராகுல், சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி!
Jul 25, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மௌனம் காப்பது ஏன்? ராகுல், சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் மாநில எம்.பி. அலுவலகத்தில் இருந்து 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவ்விவகாரத்தில் ராகுலும், சோனியா காந்தியும் மௌனம் காப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தீரஜ் சாஹூ. ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இவருக்குச் சொந்தமாக ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மதுபான தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த மதுபானத் தொழிற்சாலைகளில் கடந்த 6-ம் தேதி முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இச்சோதனையில் இதுவரை 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 4 நாட்களாகியும் பணம் எண்ணும் பணி இன்னும் நிறைவடையவில்லை.

நாட்டில் கைப்பற்றப்பட்டதில், இதுதான் மிகப்பெரிய கருப்புப் பணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மேற்கு டெல்லி எம்.பி. பர்வேஷ் வர்மா, டெல்லி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி, எம்.எல்.ஏ. விஜேந்திர குப்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தியுடன் தீரஜ் சாஹு கலந்துகொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கும் பா.ஜ.க.வின் அமித் மாளவியா, “உண்மையில் இந்த யாத்திரை நாட்டின் திருடர்களை ஒன்றிணைப்பதற்காகவே” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தெலங்கானா மாநில பா.ஜ.க. தலைவரும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சருமான கிஷன் ரெட்டி, “ராகுலின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான தீரஜ் சாஹூவின் அலுவலகங்களில் இருந்து, சுமார் 300 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றி இருக்கிறது.

தீரஜ் சாஹூவுக்கு எதிரான வருமான வரித்துறை சோதனைகள் குறித்து, ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் எதுவும் கேட்காமல் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். இதைப் பற்றி ராகுல் ஏன் சமூக வலைதளங்களில் எதுவும் பதிவிடவில்லை? ஏனென்றால் காங்கிரஸ் எப்போதும் ஊழலை ஆதரிக்கிறது. நீங்கள் எப்போதும் வருமான வரித்துறையை விமர்சிக்கிறீர்கள். ஆனால், இப்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Tags: attack Congressrahul gandhikishan reddybjp mp
ShareTweetSendShare
Previous Post

‘வளர்ச்சி அடைந்த இந்தியா @2047: இளைஞர்களின் குரல்’ திட்டம் நாளை தொடக்கம்!

Next Post

மத்தியப் பிரதேச முதல்வர் யார்? ஓரிரு நாளில் அறிவிப்பு: பா.ஜ.க. எம்.பி.!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies