ஸ்ரீரங்கம் கோவில் கோபுர வாசல் வழியாக செல்ல முயன்ற லாரி!
Jun 8, 2025, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவில் கோபுர வாசல் வழியாக செல்ல முயன்ற லாரி!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மேற்கு கோபுர வாசல் வழியாக, டிப்பர் லாரியை ஓட்டிச்செல்ல முயன்ற சம்பவம், பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘பூலோக வைகுண்டம்’ எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில், ஆழ்வார்களால் ‘மங்களாசாசனம்’ செய்யப்பட்ட பழமையான திருக்கோவில் ஆகும். இக்கோவிலில் ராஜகோபுரம் உட்பட வெள்ளை கோபுரம், வடக்கு மற்றும் மேற்கு கோபுர வாயில்களுடன் அமைந்த ரங்கநாதர் கோவிலில், தாயார் சன்னதி உட்பட பல்வேறு சன்னதிகளுக்கும் தனித்தனி கோபுரங்கள் உள்ளன.

மேலும், சித்திர வீதிகள் மற்றும் உத்திர வீதிகளில் நுழைவு வாயில் கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்கள் அனைத்திலும், சுதை சிற்பங்களும், கல்தூண்களில் புடைப்பு சிற்பங்களும் உள்ளன. பழமையான இந்த கோவிலுக்கு, யுனெஸ்கோ சார்பில், புராதன அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது. வருகிற 23-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி, கோவிலின் மேற்கு கோபுரவாசல் வழியாக, டிப்பர் லாரியை ஓட்டிச் செல்ல முயன்றனர். லாரியின் அகலம் பெரியதாக இருந்ததால், அந்த வாசல் வழியாக செல்ல முடியவில்லை.

இதனால், லாரியை பின்னோக்கி எடுத்து சென்றனர். ஆனால், டிப்பர் லாரி சிக்கிக் கொண்டதால், மேற்கு கோபுர வாசலிலிருந்த சிற்பங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags: trichysrirangam temple
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேச முதல்வர் யார்? ஓரிரு நாளில் அறிவிப்பு: பா.ஜ.க. எம்.பி.!

Next Post

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் – அகமதாபாத் முதல் மும்பை வரை 2.07 மணி நேரத்தில் கடக்கும்!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies