சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு!
Mar 15, 2026, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 7 மற்றும் 17-ம் தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், பா.ஜ.க. 54 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஆனால், முதல்வர் யார் என்பதில் குழப்பம் நிலவியது.

இம்மாநிலத்தில் 3 முறை முதல்வராக இருந்த ராமன் சிங், மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. இதனால், முதல்வரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, முதல்வரை தேர்வு செய்வதற்காக மத்திய பழங்குடி இனத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் மத்திய பார்வையாளர்கள் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் இன்று சத்தீஸ்கர் மாநிலத்திற்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தி விவாதித்தனர்.

இக்கூட்டத்தின் முடிவில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பழங்குடியினத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார். இவர், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வடக்கு சத்தீஸ்கரின் குங்குரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சாய், பா.ஜ.க.வில் முக்கியப் பொறுப்பில் இருப்பதோடு, மாநில முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்திருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க், ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் கணிசமான மக்கள்தொகை கொண்ட செல்வாக்கு மிக்க சாஹு (தெலி) சமூகத்தைச் சேர்ந்தவர்.

இவர் 2020 முதல் 2022 வரை சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. தலைவராகப் பணியாற்றியவர். பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் சுரங்கங்கள் மற்றும் எஃகுத் துறைக்கான மத்திய அமைச்சராக இருந்தார். பழங்குடியின வாக்காளர்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்படும் நபராக சாய் இருந்து வருகிறார்.

முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், மாநில பா.ஜ.க. தலைவரும், மத்திய அமைச்சருமான ரேணுகா சிங் சருதா கூறுகையில், “சத்தீஸ்கர் மாநிலத்தில் விஷ்ணு தியோ சாய் முதல்வராக பதவியேற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை” என்று கூறியிருக்கிறார்.

Tags: ChhattisgarhNew CMVishnu Deo Sai
ShareTweetSendShare
Previous Post

மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது! –  குடியரசுத் துணைத்தலைவர்

Next Post

One Bharat Sari Walkathon: : கைத்தறி சேலை அணிந்து அணிவகுத்த பெண்கள்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies