ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது : முழு விவரம்!
Jul 25, 2025, 08:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது : முழு விவரம்!

Web Desk by Web Desk
Dec 11, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சாகிப் நச்சான் உள்ளிட்ட 15 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஐஎஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மும்பையைச் சேர்ந்த சந்தேக நபர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பெங்களூரு  தொழிலதிபரை என்ஐஏ அதிகாரிகள்  பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பெங்களூரு புலிகேசி நகரில் வசிக்கும் 30 வயதான அலி ஹபீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த அவர் பல ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் உறவினர்களுடன்  கிழக்கு பெங்களூரில் வசித்து வருகிறார்.

மும்பையில் கைது செய்யப்பட்ட சில பிரதான சந்தேக நபர்களுடன் நிதி பரிவர்த்தனை செய்ததாகக் கூறப்படும் விசாரணைக்காக ஹபீஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து மொபைல்  போன்கள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேஜெட்களை கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள் அவரை மேல் விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக என்ஐஏ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் நடத்தப்பட்ட சோதனையில், 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு வான் துப்பாக்கிகள், எட்டு கத்திகள், இரண்டு மடிக்கணினிகள், ஆறு ஹார்ட் டிஸ்க்குகள், மூன்று குறுந்தகடுகள், 38 மொபைல் போன்கள் சோதனையின் போது கைப்பற்றப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களது வெளிநாட்டு தொடர்பாளர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறார்கள், மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை உருவாக்குவது உட்பட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாகிப் நச்சான் என்பவன் 3  குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவன் என கூறப்படுகிறது. விஎச்பி செயல்பாட்டாளரின் கொலை முயற்சி மற்றும் பல வழக்குகளில் அவன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா பட்கா-போரிவலியில் இருந்து செயல்பட்டு, இந்தியா முழுவதும் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கும் வன்முறைச் செயல்களைச் செய்வதற்கும் சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

Tags: NiaSaquib Nachannia arrest15 arrest
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: இன்று தீர்ப்பு!

Next Post

வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 12.9 கோடி பக்தர்கள் தரிசனம்!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies