கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார் விஷ்ணு தியோ சாய்!
Mar 15, 2026, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார் விஷ்ணு தியோ சாய்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் விஷ்ணு தியோ சாய், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தனை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார்.

சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 54 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இதையடுத்து, மாநில முதல்வரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின. இதற்காக, மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இக்குழுவினர் இன்று சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களைக் கூட்டி விவாதித்தனர். அப்போது, சட்டமன்றக் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, விஷ்ணு தியோ சாய், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தனை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். இதைத் தொடர்ந்து, விஷ்ணு தியோ சாய் விரைவில் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தீஸ்கரின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து விஷ்ணு தியோ சாய் கூறுகையில், “இன்று நான் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நம்பிக்கை காட்டிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி.

முதலமைச்சராக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எனது முன்னுரிமை. கடந்த 5 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் அவதிப்பட்டனர். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் சுமார் 18 லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதுதான் முதல்கடமை.

டிசம்பர் மாதம் 25-ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, விவசாயிகளுக்கு 2 ஆண்டுகள் போனஸ் வழங்கப்படும். பிரதமர் மோடி அளித்த உத்தரவாதத்தின் படி, அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்” என்றார்.

விஷ்ணு தியோ சாய் முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து அவரது தாயார் ஜஸ்மணி தேவி கூறுகையில், “சத்தீஸ்கர் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனது மகனுக்குக் கிடைத்திருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: ChhattisgarhCM Vishnu Deo SaiMet Governor
ShareTweetSendShare
Previous Post

கார்த்தி சிதம்பரத்துக்கு அண்ணாமலை பதிலடி!

Next Post

டி20: இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies