கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார் விஷ்ணு தியோ சாய்!
Jul 25, 2025, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார் விஷ்ணு தியோ சாய்!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் விஷ்ணு தியோ சாய், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தனை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார்.

சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 54 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இதையடுத்து, மாநில முதல்வரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின. இதற்காக, மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இக்குழுவினர் இன்று சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களைக் கூட்டி விவாதித்தனர். அப்போது, சட்டமன்றக் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, விஷ்ணு தியோ சாய், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தனை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். இதைத் தொடர்ந்து, விஷ்ணு தியோ சாய் விரைவில் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தீஸ்கரின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து விஷ்ணு தியோ சாய் கூறுகையில், “இன்று நான் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நம்பிக்கை காட்டிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி.

முதலமைச்சராக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எனது முன்னுரிமை. கடந்த 5 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் அவதிப்பட்டனர். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் சுமார் 18 லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதுதான் முதல்கடமை.

டிசம்பர் மாதம் 25-ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, விவசாயிகளுக்கு 2 ஆண்டுகள் போனஸ் வழங்கப்படும். பிரதமர் மோடி அளித்த உத்தரவாதத்தின் படி, அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்” என்றார்.

விஷ்ணு தியோ சாய் முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து அவரது தாயார் ஜஸ்மணி தேவி கூறுகையில், “சத்தீஸ்கர் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனது மகனுக்குக் கிடைத்திருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: CM Vishnu Deo SaiMet GovernorChhattisgarh
ShareTweetSendShare
Previous Post

கார்த்தி சிதம்பரத்துக்கு அண்ணாமலை பதிலடி!

Next Post

டி20: இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies