கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார் விஷ்ணு தியோ சாய்!
Jun 14, 2026, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார் விஷ்ணு தியோ சாய்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் விஷ்ணு தியோ சாய், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தனை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார்.

சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 54 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இதையடுத்து, மாநில முதல்வரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின. இதற்காக, மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இக்குழுவினர் இன்று சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களைக் கூட்டி விவாதித்தனர். அப்போது, சட்டமன்றக் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, விஷ்ணு தியோ சாய், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தனை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். இதைத் தொடர்ந்து, விஷ்ணு தியோ சாய் விரைவில் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தீஸ்கரின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து விஷ்ணு தியோ சாய் கூறுகையில், “இன்று நான் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நம்பிக்கை காட்டிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி.

முதலமைச்சராக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எனது முன்னுரிமை. கடந்த 5 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் அவதிப்பட்டனர். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் சுமார் 18 லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதுதான் முதல்கடமை.

டிசம்பர் மாதம் 25-ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, விவசாயிகளுக்கு 2 ஆண்டுகள் போனஸ் வழங்கப்படும். பிரதமர் மோடி அளித்த உத்தரவாதத்தின் படி, அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்” என்றார்.

விஷ்ணு தியோ சாய் முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து அவரது தாயார் ஜஸ்மணி தேவி கூறுகையில், “சத்தீஸ்கர் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனது மகனுக்குக் கிடைத்திருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: ChhattisgarhCM Vishnu Deo SaiMet Governor
ShareTweetSendShare
Previous Post

கார்த்தி சிதம்பரத்துக்கு அண்ணாமலை பதிலடி!

Next Post

டி20: இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies