5 ஆண்டுகளில் 36,000 இணைய முகவரிகள் முடக்கம்!
Mar 15, 2026, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 ஆண்டுகளில் 36,000 இணைய முகவரிகள் முடக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 04:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023 ஆம் ஆண்டின் அக்டோபர் வரை 7,502 இணைய முகவரிகளை மத்திய அரசு முடங்கியுள்ளது.

2018 முதல் 2023 அக்டோபர் மாதம் வரை சமூக ஊடக நிறுவனங்களில் 36,838 இணைய முகவரிகளை பிளாக் செய்யுமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது என அத்துறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், “தகவல் தொழில்நுட்பம் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ், நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கை சீர் குலைக்கும் விதமான அல்லது குற்றங்களைத் தூண்டும் விதமான பதிவுகள் கொண்ட இணையதளங்கள் முடிக்கப்படுகின்றன என அமைச்சர் ராஜீவ் கூறியுள்ளார்.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் பதிவுகள், கணக்குகள் அல்லது ஹேஷ்டேகுகளை பிளாக் செய்ய அல்லது அகற்ற மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளின் விவரங்களை பகிருமாறு ஜான் பிரிட்டாஸ் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், 2018 முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரை, அதிகபட்சமாக ட்விட்டர் சமூக வலைத்தள நிறுவனத்துக்கு மத்திய அரசு 13,660 உத்தரவுகளை அனுப்பியுள்ளது என்று கூறினார்.

2018 ஆம் ஆண்டு 224 உத்தரவுகள் அனுப்பப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு 1041 ஆகவும், 2020 ஆம் ஆண்டு 2,731 ஆகவும், 2021 ஆம் ஆண்டு 2,851 ஆகவும், 2022 ஆம் ஆண்டு 3,423 ஆகவும் கூடியுள்ளது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் வரை 3,390 உத்தரவுகள் ட்விட்டருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

2018 முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரை, பேஸ்புக்கிற்கு 10,197 உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராமுக்கு 3,023 உத்தரவுகளும், யூடியூப்பிற்கு 5,759 உத்தரவுகளும் பிற சமூக ஊடகங்களுக்கு 4,199 உத்தரவுகளும் அனுப்பப்பபட்டுள்ளன என்று அமைச்சர் ராஜீவ் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில் இணையம் பாதுகாப்பாகவும், நம்பகமானதாகவும் இருப்பதையும் அனைத்து பயனர்களும் பொறுப்புணர்வுடன் இருப்பதையும் உறுதி செய்வதுதான் அரசின் கொள்கை” என்று ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

Tags: IndiaRajiv Chandrasekharinternetwebsiteblock
ShareTweetSendShare
Previous Post

பெண்ணின் கண்களிலிருந்து நீக்கப்பட்ட 60 உயிருள்ள புழுக்கள்!

Next Post

கிரிக்கெட் : நவம்பர் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies