அமெரிக்க புலனாய்வு துறை இயக்குநர் கிறிஸ்டோபர் ரே நேற்று சிபிஐ இயக்குனரை சந்தித்து பேசினார்.
அமெரிக்க புலனாய்வு அமைப்பின்(எப்பிஐ) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அரசு முறைப்பயணமாக டிசம்பர் 10ஆம் தேதி டெல்லி வந்தார். இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அவர் நேற்று சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டை டெல்லியில் சந்தித்து பேசினார்.
அப்போது, சைபர் குற்ற வழக்குகள், போதை பொருள் கடத்தல், நிலுவையில் உள்ள நீதித்துறை கோரிக்கைகள், தேடப்படும் குற்றவாளிகளை நாடு கடத்துவது உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இரு அதிகாரிகளும் விவாதித்ததாக தெரிகிறது. மேலும் குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நீதி என்னும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் மத்திய அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளான். அவனை நியூயார்க் நகரில் கொலை செய்ய முயற்சி செய்ததாக நிகில் குப்தா என்ற இந்தியர் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.