பிரதமர் மோடி வாரணாசி சுற்றுப் பயணம்: 'மிஷன்-2024' தேர்தல் பிரச்சாரம்!
Sep 9, 2025, 02:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி வாரணாசி சுற்றுப் பயணம்: ‘மிஷன்-2024’ தேர்தல் பிரச்சாரம்!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2 நாள் பயணமாக வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், இதன் மூலம் “மிஷன் 2024” என்கிற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுகிறார்.

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “மிஷன் 2024” என்கிற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறார். 2 நாள் பயணமாக, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது, பிரதமர் மோடி தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது, வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மேலும், காசி தமிழ்ச் சங்கமம் 2-ம் கட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். தவிர, கங்கை நதியில் நடைபெறும் பிரம்மாண்ட கங்கா ஆரத்தியையும் காணவிருக்கிறார். அதோடு, கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நினைவுச் சின்னங்களுக்கு இடையேயான “விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா” கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து வாரணாசி கோட்ட ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா கூறுகையில், “பிரதமர் மோடி காசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, தொடர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு, மத்திய கல்வி அமைச்சகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதன் 2-வது கட்ட நிகழ்ச்சி டிசம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிக்கு, கலாச்சாரம், ஜவுளி, இரயில்வே போன்ற பிற துறைகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்நிகழ்ச்சி, இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கிடையேயான வரலாற்று மற்றும் குடிமைத் தொடர்பின் பல பகுதிகள் கலாச்சார மரபுகளை நெருக்கமாக கொண்டு, பகிர்வு பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகின்றன” என்றார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags: PM ModivaranasiMission 2024f
ShareTweetSendShare
Previous Post

மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பில் ஆயுதப்படை வீரர் பலி!

Next Post

இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவு வடிவமைப்பு பணி!

Related News

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies