பிரதமர் மோடி வாரணாசி சுற்றுப் பயணம்: 'மிஷன்-2024' தேர்தல் பிரச்சாரம்!
Jul 25, 2025, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி வாரணாசி சுற்றுப் பயணம்: ‘மிஷன்-2024’ தேர்தல் பிரச்சாரம்!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2 நாள் பயணமாக வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், இதன் மூலம் “மிஷன் 2024” என்கிற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுகிறார்.

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “மிஷன் 2024” என்கிற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறார். 2 நாள் பயணமாக, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது, பிரதமர் மோடி தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது, வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மேலும், காசி தமிழ்ச் சங்கமம் 2-ம் கட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். தவிர, கங்கை நதியில் நடைபெறும் பிரம்மாண்ட கங்கா ஆரத்தியையும் காணவிருக்கிறார். அதோடு, கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நினைவுச் சின்னங்களுக்கு இடையேயான “விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா” கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து வாரணாசி கோட்ட ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா கூறுகையில், “பிரதமர் மோடி காசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, தொடர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு, மத்திய கல்வி அமைச்சகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதன் 2-வது கட்ட நிகழ்ச்சி டிசம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிக்கு, கலாச்சாரம், ஜவுளி, இரயில்வே போன்ற பிற துறைகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்நிகழ்ச்சி, இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கிடையேயான வரலாற்று மற்றும் குடிமைத் தொடர்பின் பல பகுதிகள் கலாச்சார மரபுகளை நெருக்கமாக கொண்டு, பகிர்வு பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகின்றன” என்றார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags: PM ModivaranasiMission 2024f
ShareTweetSendShare
Previous Post

மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பில் ஆயுதப்படை வீரர் பலி!

Next Post

இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவு வடிவமைப்பு பணி!

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies