பிரதமர் மோடி வாரணாசி சுற்றுப் பயணம்: 'மிஷன்-2024' தேர்தல் பிரச்சாரம்!
Jan 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி வாரணாசி சுற்றுப் பயணம்: ‘மிஷன்-2024’ தேர்தல் பிரச்சாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 14, 2023, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2 நாள் பயணமாக வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், இதன் மூலம் “மிஷன் 2024” என்கிற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுகிறார்.

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “மிஷன் 2024” என்கிற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறார். 2 நாள் பயணமாக, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது, பிரதமர் மோடி தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது, வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மேலும், காசி தமிழ்ச் சங்கமம் 2-ம் கட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். தவிர, கங்கை நதியில் நடைபெறும் பிரம்மாண்ட கங்கா ஆரத்தியையும் காணவிருக்கிறார். அதோடு, கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நினைவுச் சின்னங்களுக்கு இடையேயான “விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா” கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து வாரணாசி கோட்ட ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா கூறுகையில், “பிரதமர் மோடி காசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, தொடர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு, மத்திய கல்வி அமைச்சகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதன் 2-வது கட்ட நிகழ்ச்சி டிசம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிக்கு, கலாச்சாரம், ஜவுளி, இரயில்வே போன்ற பிற துறைகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்நிகழ்ச்சி, இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கிடையேயான வரலாற்று மற்றும் குடிமைத் தொடர்பின் பல பகுதிகள் கலாச்சார மரபுகளை நெருக்கமாக கொண்டு, பகிர்வு பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகின்றன” என்றார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags: PM ModivaranasiMission 2024f
ShareTweetSendShare
Previous Post

மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பில் ஆயுதப்படை வீரர் பலி!

Next Post

இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவு வடிவமைப்பு பணி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies