தபால் அலுவலக மசோதா 2023 மக்களவையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே, இம்மசோதா இன்று நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1898 இந்திய தபால் அலுவலகச் சட்டத்தை ரத்து செய்யவும், இந்தியாவில் தபால் அலுவலகம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யவும் தபால் அலுவலக மசோதா 2023 முயல்கிறது. இந்த மசோதாவின் விதிகளின்படி, தபால் அலுவலகம் தபால் தலைகளை வெளியிடுவதற்கான பிரத்யேக சலுகையைப் பெறும்.
மேலும், டைரக்டர் ஜெனரல் தபால் தலைகள் மற்றும் அஞ்சல் எழுதுபொருட்கள் வழங்கல் மற்றும் விற்பனை தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவார். எந்தவொரு வெளிநாட்டு அல்லது பிராந்தியத்துடன் செய்யப்படும் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கும்.
இந்த மசோதைவை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே, இம்மசோதா இன்று நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த, பாரதிய நியாயா (2-வது) சன்ஹிதா 2023, பாரதிய நகரிக் சுரக்ஷா (2-வது) சன்ஹிதா, 2023 மற்றும் பாரதிய சக்ஷ்யா (2-வது) மசோதா 2023 ஆகிய 3 மசோதாக்களும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே, இம்மசோதாக்களும் இன்று நிறைவற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.