சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு நாளை சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில் அறிவித்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு, கேரளா மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்ப சுவாமி திருக்கோவிலில், மண்டலக் காலத்தையொட்டி, மகரவிளக்கு பூஜைக்காகக் கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையொட்டி, ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு நாளை சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து நாளை மதியம் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில் (வண்டி எண் – 06119) மறுநாள் காலை 6.45 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணிக்கு புறப்படும் இரயில் (வண்டி எண் – 06120) மறுநாள் காலை 5.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த சிறப்பு இரயில் சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டயம், மாவேலிக்கரை வழியாக இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே கூறியுள்ளது.