சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கில் இலாகா இல்லாத திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைது செய்தனர்.
இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி முதலில் ஓமந்தூர் அரசு பன்நோக்கு மருத்துவமனையிலும், பின்னர் தனியார் மருத்துவமனையிலும் அட்மிட் செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நலம் தேறிய பின்னர், சென்னை புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.இதனையடுத்து, புழல் சிறைச்சாலையில் இருந்து காணொலி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல், அடுத்த ஆண்டு, அதாவது 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.