U-19 ஆசியக் கோப்பை : இறுதிப்போட்டியில் இந்தியாவும் இல்லை பாகிஸ்தானும் இல்லை!
Jul 25, 2025, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U-19 ஆசியக் கோப்பை : இறுதிப்போட்டியில் இந்தியாவும் இல்லை பாகிஸ்தானும் இல்லை!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றுள்ளது.

10வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது . இதன் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. 50 ஓவர்கள் கொண்ட இந்த தொடரில் நேற்று இரண்டு அரையிறுதி போட்டி நடைபெற்றது.

முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடியன.

பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 48வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 193 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக அயன் அப்சல் கான் 7 பௌண்டரீஸ் என மொத்தமாக 57 பந்துகளில் 55 ரன்களை எடுத்தார். அதேபோல் தொடக்க வீரராக களமிறங்கிய ஆர்யன்ஷ் சர்மா 46 ரன்களும், ஈதன் கார்ல் டி’சோசா 37 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக உபைத் ஷா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 182 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

அதேபோல் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 43வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 188 ரன்களை எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக முருகன் பெருமாள் 62 ரன்களும், முஷீர் கான் 50 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக மருஃப் மிருதா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் அரிஃபுல் இஸ்லாம் தனி ஒரு ஆளாக நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அரிஃபுல் இஸ்லாம் 9 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 90 பந்துகளில் 94 ரன்களை எடுத்தார். அதேபோல் வங்கதேச அணியில் அஹ்ரார் அமீன் 44 ரன்களை எடுத்தார். இதனால் 43வது ஓவரில் வங்கதேச அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இந்நிலையில் இறுதிப்போட்டி நாளை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப்போட்டிக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசம் அணிகள் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது ஆசிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: IndiapakistanDefeatjunior asia cup
ShareTweetSendShare
Previous Post

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்!

Next Post

தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள்!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies