U-19 ஆசியக் கோப்பை : இறுதிப்போட்டியில் இந்தியாவும் இல்லை பாகிஸ்தானும் இல்லை!
Sep 14, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U-19 ஆசியக் கோப்பை : இறுதிப்போட்டியில் இந்தியாவும் இல்லை பாகிஸ்தானும் இல்லை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 12:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றுள்ளது.

10வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது . இதன் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. 50 ஓவர்கள் கொண்ட இந்த தொடரில் நேற்று இரண்டு அரையிறுதி போட்டி நடைபெற்றது.

முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடியன.

பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 48வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 193 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக அயன் அப்சல் கான் 7 பௌண்டரீஸ் என மொத்தமாக 57 பந்துகளில் 55 ரன்களை எடுத்தார். அதேபோல் தொடக்க வீரராக களமிறங்கிய ஆர்யன்ஷ் சர்மா 46 ரன்களும், ஈதன் கார்ல் டி’சோசா 37 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக உபைத் ஷா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 182 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

அதேபோல் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 43வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 188 ரன்களை எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக முருகன் பெருமாள் 62 ரன்களும், முஷீர் கான் 50 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக மருஃப் மிருதா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் அரிஃபுல் இஸ்லாம் தனி ஒரு ஆளாக நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அரிஃபுல் இஸ்லாம் 9 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 90 பந்துகளில் 94 ரன்களை எடுத்தார். அதேபோல் வங்கதேச அணியில் அஹ்ரார் அமீன் 44 ரன்களை எடுத்தார். இதனால் 43வது ஓவரில் வங்கதேச அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இந்நிலையில் இறுதிப்போட்டி நாளை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப்போட்டிக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசம் அணிகள் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது ஆசிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: IndiapakistanDefeatjunior asia cup
Share
Tweet
SendShare
Previous Post

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்!

Next Post

தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள்!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies