நமது படைகளின் தியாகம் மற்றும் வீரம் என்றென்றும் தைரியத்தின் தூணாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 16 ஆம் தேதி ‘விஜய் திவாஸ்’ கொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் திவாஸ் தினத்தில் நமது ராணுவ வீரர்களின் துணிச்சலான இதயங்களுக்கு தலைவணங்குகிறேன்.
இந்நாளில் நமது வீரர்கள் 1971-ல் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக மகத்தான வெற்றியைப் பெற்று வாழ்வின் கண்ணியம், மற்றும் மனித விழுமியங்களைப் பாதுகாத்தனர், அதன் விளைவாக ஒரு புதிய தேசம் (வங்காளதேசம்) உருவாக்கப்பட்டது. நமது படைகளின் தியாகம் மற்றும் வீரம் என்றென்றும் தைரியத்தின் தூணாக இருக்கும் என அமித் ஷா கூறியுள்ளார்.