பிப்ரவரி 8-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Jan 14, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிப்ரவரி 8-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 17, 2023, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் லாகூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப். இவரது தலைமையிலான அரசின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், 3 நாட்களுக்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதியே அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அன்வர் உல் ஹக் காகர் என்பவர் இடைக்கால பிரதமராக இருந்து வருகிறார். எனினும், பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே சென்றது. இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு பிப்ரவரி 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

ஆனால், அன்றையதினம் இரவு அந்நாட்டின் அதிபரை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர், பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். இதனால், தேர்தல் எந்த தேதியில் நடைபெறும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. அதேசமயம், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்தார். இவர்களில் பலர் அதிகாரவர்க்கத்தினர் என்பதால், லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்தும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் நியமனத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனால், தேர்தல் தேதியை அறிவிப்பதில் குழப்பம் நிலவியது. இந்த சூழலில், லாகூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தேர்தலுக்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதேசமயம், பாகிஸ்தானில் கடந்த தேர்தலில் 342 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அது தற்போது தொகுதி மறுவரையறையின் படி 6 இடங்கள் குறைக்கப்பட்டு 336 இடங்களாக உள்ளன. இதில், 60 தொகுதிகள் பெண்களுக்கான ரிசர்வ் தொகுதியாகும். முஸ்லீம் இல்லாத வேட்பாளருக்காக 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

Tags: pakistanParliament ElectionFebruary 8
ShareTweetSendShare
Previous Post

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!

Next Post

அரியானாவைச் சேர்ந்த 10,000 தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலை

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies