பிப்ரவரி 8-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Oct 4, 2025, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிப்ரவரி 8-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் லாகூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப். இவரது தலைமையிலான அரசின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், 3 நாட்களுக்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதியே அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அன்வர் உல் ஹக் காகர் என்பவர் இடைக்கால பிரதமராக இருந்து வருகிறார். எனினும், பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே சென்றது. இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு பிப்ரவரி 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

ஆனால், அன்றையதினம் இரவு அந்நாட்டின் அதிபரை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர், பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். இதனால், தேர்தல் எந்த தேதியில் நடைபெறும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. அதேசமயம், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்தார். இவர்களில் பலர் அதிகாரவர்க்கத்தினர் என்பதால், லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்தும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் நியமனத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனால், தேர்தல் தேதியை அறிவிப்பதில் குழப்பம் நிலவியது. இந்த சூழலில், லாகூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தேர்தலுக்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதேசமயம், பாகிஸ்தானில் கடந்த தேர்தலில் 342 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அது தற்போது தொகுதி மறுவரையறையின் படி 6 இடங்கள் குறைக்கப்பட்டு 336 இடங்களாக உள்ளன. இதில், 60 தொகுதிகள் பெண்களுக்கான ரிசர்வ் தொகுதியாகும். முஸ்லீம் இல்லாத வேட்பாளருக்காக 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

Tags: pakistanParliament ElectionFebruary 8
ShareTweetSendShare
Previous Post

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!

Next Post

அரியானாவைச் சேர்ந்த 10,000 தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலை

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies