பிப்ரவரி 8-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Aug 18, 2025, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிப்ரவரி 8-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் லாகூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப். இவரது தலைமையிலான அரசின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், 3 நாட்களுக்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதியே அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அன்வர் உல் ஹக் காகர் என்பவர் இடைக்கால பிரதமராக இருந்து வருகிறார். எனினும், பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே சென்றது. இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு பிப்ரவரி 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

ஆனால், அன்றையதினம் இரவு அந்நாட்டின் அதிபரை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர், பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். இதனால், தேர்தல் எந்த தேதியில் நடைபெறும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. அதேசமயம், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்தார். இவர்களில் பலர் அதிகாரவர்க்கத்தினர் என்பதால், லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்தும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் நியமனத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனால், தேர்தல் தேதியை அறிவிப்பதில் குழப்பம் நிலவியது. இந்த சூழலில், லாகூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தேர்தலுக்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதேசமயம், பாகிஸ்தானில் கடந்த தேர்தலில் 342 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அது தற்போது தொகுதி மறுவரையறையின் படி 6 இடங்கள் குறைக்கப்பட்டு 336 இடங்களாக உள்ளன. இதில், 60 தொகுதிகள் பெண்களுக்கான ரிசர்வ் தொகுதியாகும். முஸ்லீம் இல்லாத வேட்பாளருக்காக 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

Tags: pakistanParliament ElectionFebruary 8
ShareTweetSendShare
Previous Post

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!

Next Post

அரியானாவைச் சேர்ந்த 10,000 தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலை

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies