பிப்ரவரி 8-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Sep 13, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிப்ரவரி 8-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 17, 2023, 09:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் லாகூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப். இவரது தலைமையிலான அரசின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், 3 நாட்களுக்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதியே அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அன்வர் உல் ஹக் காகர் என்பவர் இடைக்கால பிரதமராக இருந்து வருகிறார். எனினும், பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே சென்றது. இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு பிப்ரவரி 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

ஆனால், அன்றையதினம் இரவு அந்நாட்டின் அதிபரை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர், பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். இதனால், தேர்தல் எந்த தேதியில் நடைபெறும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. அதேசமயம், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்தார். இவர்களில் பலர் அதிகாரவர்க்கத்தினர் என்பதால், லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்தும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் நியமனத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனால், தேர்தல் தேதியை அறிவிப்பதில் குழப்பம் நிலவியது. இந்த சூழலில், லாகூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தேர்தலுக்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதேசமயம், பாகிஸ்தானில் கடந்த தேர்தலில் 342 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அது தற்போது தொகுதி மறுவரையறையின் படி 6 இடங்கள் குறைக்கப்பட்டு 336 இடங்களாக உள்ளன. இதில், 60 தொகுதிகள் பெண்களுக்கான ரிசர்வ் தொகுதியாகும். முஸ்லீம் இல்லாத வேட்பாளருக்காக 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

Tags: pakistanParliament ElectionFebruary 8
Share
Tweet
SendShare
Previous Post

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!

Next Post

அரியானாவைச் சேர்ந்த 10,000 தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies