விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!
Sep 13, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 09:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குஜராத்தின் முக்கிய நகரங்களின் போக்குவரத்து சந்திப்புகள், நெரிசலான இடங்களில்,  போக்குவரத்து விதிமீறல் மற்றும் குற்ற சம்பவங்களைக் கண்காணிப்பதற்காக, 10 ஆயிரத்து 500-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராமக்களைப் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

குஜராத்தில் விஸ்வாஸ் திட்டம் இரண்டின் கீழ், 52 நகராட்சிகள் மற்றும் வதோதரா, சூரத் போன்ற பெரிய நகரங்களில் 10 ஆயிரத்து 500 சிசிடிவி கேமராக்களைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விஸ்வாஸ் திட்டப் பணிக்குழு மற்றும் ஏடிஜி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விஸ்வாஸ் திட்டம்-2 செயல்படுத்தல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

குஜராத்தை ஒட்டிய இராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள 80 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், அவற்றை இரவும் பகலும் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் கீழ், வதோதரா, சூரத் மற்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நான்கு ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் முக்கிய நகரங்களின் போக்குவரத்து சந்திப்புகள், நெரிசலான இடங்கள், மார்கெட்டுகள், மாநிலத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்கள் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்படும்.

இந்த இடங்களில், வாகனங்களின் பதிவு எண் தகடுகளைப்  படிக்கும்,  சந்தேகத்திற்கிடமான செயல்களைக் கண்காணிக்கும் திறன் கொண்ட, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக இ-சலான் வழங்கும் திறன் கொண்ட அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில் 7 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 7 ஆயிரத்து 300 வழக்குகளை கண்டுபிடிப்பதில் சிசிடிவி கேமராக்கள் உதவியாக இருந்தது

Tags: CCTV camerasgujarat10500 CCTV camerassurveillance camerasViswas scheme
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள்!

Next Post

பிப்ரவரி 8-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies