விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!
Jul 29, 2026, 09:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தின் முக்கிய நகரங்களின் போக்குவரத்து சந்திப்புகள், நெரிசலான இடங்களில்,  போக்குவரத்து விதிமீறல் மற்றும் குற்ற சம்பவங்களைக் கண்காணிப்பதற்காக, 10 ஆயிரத்து 500-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராமக்களைப் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

குஜராத்தில் விஸ்வாஸ் திட்டம் இரண்டின் கீழ், 52 நகராட்சிகள் மற்றும் வதோதரா, சூரத் போன்ற பெரிய நகரங்களில் 10 ஆயிரத்து 500 சிசிடிவி கேமராக்களைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விஸ்வாஸ் திட்டப் பணிக்குழு மற்றும் ஏடிஜி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விஸ்வாஸ் திட்டம்-2 செயல்படுத்தல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

குஜராத்தை ஒட்டிய இராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள 80 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், அவற்றை இரவும் பகலும் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் கீழ், வதோதரா, சூரத் மற்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நான்கு ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் முக்கிய நகரங்களின் போக்குவரத்து சந்திப்புகள், நெரிசலான இடங்கள், மார்கெட்டுகள், மாநிலத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்கள் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்படும்.

இந்த இடங்களில், வாகனங்களின் பதிவு எண் தகடுகளைப்  படிக்கும்,  சந்தேகத்திற்கிடமான செயல்களைக் கண்காணிக்கும் திறன் கொண்ட, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக இ-சலான் வழங்கும் திறன் கொண்ட அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில் 7 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 7 ஆயிரத்து 300 வழக்குகளை கண்டுபிடிப்பதில் சிசிடிவி கேமராக்கள் உதவியாக இருந்தது

Tags: CCTV camerasgujarat10500 CCTV camerassurveillance camerasViswas scheme
ShareTweetSendShare
Previous Post

அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள்!

Next Post

பிப்ரவரி 8-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies