ரூ.12,000 இழப்பீடு கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!
Jul 23, 2025, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.12,000 இழப்பீடு கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12,000 ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மிக்ஜாம் புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதில், மேற்கண்ட 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது.

மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. மேலும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்ததோடு, அத்தியாவசியப் பொருட்களும் வீணாகிப் போயின.

அதேபோல, கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்து டோக்கன் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், 6,000 ரூபாய் இழப்பீடு போதாது என்றும், 12,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்தார்.

அமைப்புச் செயலாளர் பாரத மாதா செந்தில், தென் சென்னை தலைவர் சீனிவாசன் உட்பட 4 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், புயல் நிவாரணமாக 12,000 ரூபாய் வழங்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அர்ஜூன் சம்பத், “புயல் வெள்ளத்தில் சேதமடைந்த வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பதிலாக, அரசு சார்பில் இலவசமாக புதிய பொருட்கள் வழங்க வேண்டும். வாகனங்கள் சேதமடைந்ததால், அவற்றை இலவசமாக பழுது நீக்கித் தருவதோடு, இ.எம்.ஐ. தவணையை வங்கிகள் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

மேலும், சேதமடைந்த உணவுப் பொருட்களுக்கு ஈடாக அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுசெய்யும் வகையில், அந்நிறுவனங்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், சரியான திட்டமிடல் வேண்டும்” என்றார்.

Tags: ChennaiprotestIndhu Makkal Katchi
ShareTweetSendShare
Previous Post

குமரியில் தொடரும் மழை : கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு!

Next Post

இந்திய அணிக்கு 117 ரன்கள் வெற்றி இலக்கு!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies