அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்: கேரள ஆளுநர் காட்டம்!
Jul 23, 2025, 02:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்: கேரள ஆளுநர் காட்டம்!

Web Desk by Web Desk
Dec 18, 2023, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு எதிராக பேனர் மற்றும் போஸ்டர் வைத்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், இது அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

கேரளாவில் மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ., ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகிறது.

மேலும், ஆளுநரை எந்தப் பல்கலைக்கழகத்திலும் வேந்தராக நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று எஸ்.எப்.ஐ. அமைப்பினர் கூறி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சிக்காகச் சென்ற ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் தன்னை தாக்க சதி செய்வதாகவும், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், முதல்வர் நிகழ்ச்சியில் இதுபோன்று போராட்டக்காரர்கள் அனுமதிக்கப்படுவார்களா? முதல்வரின் கார் அருகே யாரேனும் வர இயலுமா? அதற்கு காவல்துறை அனுமதிக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள காலிகட் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஆளுநர் ஆரிஃப் முகமது கான், அங்கிருக்கும் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார்.

அப்போது, விருந்தினர் மாளிகையின் நுழைவு வாயிலில் ஆளுநர் வெளியேறும்படி வலியுறுத்தி “சான்சிலர் கோ பேக்” என்று கறுப்பு நிறத்தில் பேனர்கள் கட்டப்பட்டிருந்தது. மேலும், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. இதைக்கண்ட ஆளுநர் கடும் ஆத்திரமடைந்தார்.

இதையடுத்து, பேனர்களை வைக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும், இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் விளக்கம் கேட்குமாறு தனது செயலருக்கு உத்தரவிட்டார்.

பின்னர், இதுகுறித்துப் பேசிய ஆளுநர் ஆரிஃப் முகமது கான், “இது மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம். நேற்றே பேனர் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதை தடுக்கவும், அகற்றுவதற்காகவும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் இங்கு தங்கியிருந்தால் இவ்வளவு போலீஸார் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில பேனர் வைத்திருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

Tags: KeralaprotestGovernorSFI
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் அமளி : டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட 33 எம்பிக்கள் இடைநீக்கம்!

Next Post

இயல்பு நிலை திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் – தமிழிசை சவுந்தரராஜன்

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies