அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்: கேரள ஆளுநர் காட்டம்!
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்: கேரள ஆளுநர் காட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 18, 2023, 05:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு எதிராக பேனர் மற்றும் போஸ்டர் வைத்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், இது அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

கேரளாவில் மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ., ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகிறது.

மேலும், ஆளுநரை எந்தப் பல்கலைக்கழகத்திலும் வேந்தராக நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று எஸ்.எப்.ஐ. அமைப்பினர் கூறி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சிக்காகச் சென்ற ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் தன்னை தாக்க சதி செய்வதாகவும், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், முதல்வர் நிகழ்ச்சியில் இதுபோன்று போராட்டக்காரர்கள் அனுமதிக்கப்படுவார்களா? முதல்வரின் கார் அருகே யாரேனும் வர இயலுமா? அதற்கு காவல்துறை அனுமதிக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள காலிகட் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஆளுநர் ஆரிஃப் முகமது கான், அங்கிருக்கும் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார்.

அப்போது, விருந்தினர் மாளிகையின் நுழைவு வாயிலில் ஆளுநர் வெளியேறும்படி வலியுறுத்தி “சான்சிலர் கோ பேக்” என்று கறுப்பு நிறத்தில் பேனர்கள் கட்டப்பட்டிருந்தது. மேலும், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. இதைக்கண்ட ஆளுநர் கடும் ஆத்திரமடைந்தார்.

இதையடுத்து, பேனர்களை வைக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும், இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் விளக்கம் கேட்குமாறு தனது செயலருக்கு உத்தரவிட்டார்.

பின்னர், இதுகுறித்துப் பேசிய ஆளுநர் ஆரிஃப் முகமது கான், “இது மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம். நேற்றே பேனர் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதை தடுக்கவும், அகற்றுவதற்காகவும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் இங்கு தங்கியிருந்தால் இவ்வளவு போலீஸார் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில பேனர் வைத்திருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

Tags: KeralaprotestGovernorSFI
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவையில் அமளி : டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட 33 எம்பிக்கள் இடைநீக்கம்!

Next Post

இயல்பு நிலை திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் – தமிழிசை சவுந்தரராஜன்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies