பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்!
Mar 15, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி மதியம் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் திடீரென மக்களவையில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்தனர்.

தொடர்ந்து, கோஷமிட்டபடியே சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடிய இருவரையும் எம்.பி.க்கள் பிடிக்க முயன்றனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த கலர் புகைக் குண்டுகளை மக்களவையில் வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும், இருவரையும் எம்.பி.க்கள் பிடித்து அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல, இச்சம்பவம் நடந்த அதேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த இருவரையும் பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். 4 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்திருக்கும் நிலையில், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆனால், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கக் கோரி, எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே, கடந்த 16-ம் தேதி தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க. எம்.பி. கனிமொழி உட்பட மக்களவையில் இருந்து 13 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் இருந்து 1 எம்.பி.யும் என மொத்தம் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் 18-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம்போல கூடின. ஆனால், அப்போதும் எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பின்னர், அவை மீண்டும் கூடியபோதும், எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஆகவே, மக்களவையில் 33 பேர், மாநிலங்களவையில் 45 பேர் என மொத்தம் 78 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் தொடர் அமளி குறித்தும், 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்தும் விவாதிப்பதற்காக பா.ஜ.க. நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் கூட்டத்தை இன்று கூட்டி இருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது.

இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ், அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

Tags: PM ModibjpParliamentary party meeting
ShareTweetSendShare
Previous Post

திமுக மக்கள் நலனுக்கான பணிகளைச் செய்வதில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து! – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies