பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்!
Aug 18, 2025, 09:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி மதியம் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் திடீரென மக்களவையில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்தனர்.

தொடர்ந்து, கோஷமிட்டபடியே சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடிய இருவரையும் எம்.பி.க்கள் பிடிக்க முயன்றனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த கலர் புகைக் குண்டுகளை மக்களவையில் வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும், இருவரையும் எம்.பி.க்கள் பிடித்து அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல, இச்சம்பவம் நடந்த அதேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த இருவரையும் பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். 4 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்திருக்கும் நிலையில், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆனால், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கக் கோரி, எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே, கடந்த 16-ம் தேதி தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க. எம்.பி. கனிமொழி உட்பட மக்களவையில் இருந்து 13 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் இருந்து 1 எம்.பி.யும் என மொத்தம் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் 18-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம்போல கூடின. ஆனால், அப்போதும் எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பின்னர், அவை மீண்டும் கூடியபோதும், எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஆகவே, மக்களவையில் 33 பேர், மாநிலங்களவையில் 45 பேர் என மொத்தம் 78 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் தொடர் அமளி குறித்தும், 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்தும் விவாதிப்பதற்காக பா.ஜ.க. நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் கூட்டத்தை இன்று கூட்டி இருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது.

இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ், அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

Tags: PM ModibjpParliamentary party meeting
ShareTweetSendShare
Previous Post

திமுக மக்கள் நலனுக்கான பணிகளைச் செய்வதில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து! – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

Load More

அண்மைச் செய்திகள்

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies