பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்!
Jul 29, 2026, 01:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி மதியம் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் திடீரென மக்களவையில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்தனர்.

தொடர்ந்து, கோஷமிட்டபடியே சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடிய இருவரையும் எம்.பி.க்கள் பிடிக்க முயன்றனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த கலர் புகைக் குண்டுகளை மக்களவையில் வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும், இருவரையும் எம்.பி.க்கள் பிடித்து அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல, இச்சம்பவம் நடந்த அதேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த இருவரையும் பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். 4 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்திருக்கும் நிலையில், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆனால், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கக் கோரி, எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே, கடந்த 16-ம் தேதி தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க. எம்.பி. கனிமொழி உட்பட மக்களவையில் இருந்து 13 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் இருந்து 1 எம்.பி.யும் என மொத்தம் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் 18-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம்போல கூடின. ஆனால், அப்போதும் எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பின்னர், அவை மீண்டும் கூடியபோதும், எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஆகவே, மக்களவையில் 33 பேர், மாநிலங்களவையில் 45 பேர் என மொத்தம் 78 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் தொடர் அமளி குறித்தும், 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்தும் விவாதிப்பதற்காக பா.ஜ.க. நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் கூட்டத்தை இன்று கூட்டி இருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது.

இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ், அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

Tags: PM ModibjpParliamentary party meeting
ShareTweetSendShare
Previous Post

திமுக மக்கள் நலனுக்கான பணிகளைச் செய்வதில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து! – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies