எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைப்பது ஏன்?: பிரதமர் மோடி புதிய தகவல்!
Aug 18, 2025, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைப்பது ஏன்?: பிரதமர் மோடி புதிய தகவல்!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்கட்சிக் கூட்டணியின் நோக்கம் நமது ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், பா.ஜ.க.வின் நோக்கம் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது. கடந்த 13-ம் தேதி பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் மக்களவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் மற்றும் எதிர்கட்சிகளின் அமளி குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி தலைமையில் புதுடெல்லியில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து விவரித்தார்.

அப்போது, “ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் பாதுகாப்பு மீறலை கண்டித்திருக்க வேண்டும். விதிமீறலைப் போன்றே ஆபத்தான இச்செயலுக்கு சில கட்சிகள் ஆதரவளிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் எதிர்கட்சிகள் திணறுகின்றன. இதன் காரணமாகவே, நாடாளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்துகிறார்கள்.

எதிர்கட்சிகளின் இத்தகைய நடவடிக்கைகளால், எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களது எம்.பி.க்களை எண்ணிக்கை குறைவதை உறுதி செய்யும். அதேசமயம், பா.ஜ.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

எதிர்கட்சிகளைப் பொறுத்தவரை, நமது ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், பா.ஜ.க.வின் நோக்கம் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதுதான். ஆகவே, நாட்டின் வளர்ச்சிக்காக பா.ஜ.க. பாடுபடும் என்று பிரதமர் மோடி கூறினார்” என்று கூறினார்.

Tags: PM ModibjpParliamentary party meeting
ShareTweetSendShare
Previous Post

அரிசியின் சில்லறை விற்பனை விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும்!

Next Post

கேரள முதல்வருக்கு எதிராக வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்!

Related News

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

Load More

அண்மைச் செய்திகள்

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies