இனப்படுகொலை: பலூச் இன மக்கள் போராட்டம்!
Mar 15, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனப்படுகொலை: பலூச் இன மக்கள் போராட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் பலூச் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, தேரா காஜிகான் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் நாடு ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமலும் இருந்து வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் நாட்டுக்கு மற்றொரு நெருக்கடியாக இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, பலூச் மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இப்போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் பலூச் போராளிகள் காணாமல் போவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆகவே, தங்களுக்கு எதிராக அரசே தீவிரவாத அமைப்பு போல செயல்படுவதாக பலூச் மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் மேற்கண்ட நடவடிக்கையைக் கண்டித்து பலுசிஸ்தானின் தேரா காஜிகான் நகரில் ஏராளமான பலூச் மக்கள் திரண்டு மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பலூச் ஒற்றுமைக் குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பலரும் தங்களது கைகளில் காணாமல் போன தங்களது குடும்பத்தைச் சேர்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பலூச் யாக்ஜேட்டி கவுன்சில் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது தேரா காஜிகானில் போலீஸார் தடியடி நடத்தியதாகவும், 2 பெண்கள் உட்பட 20 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு யாருக்கும் தெரியாத இடத்தில் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் போராட்டக் குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அக்கவுன்சில் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “தேரா காஜிகானில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இப்போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கில் போலீஸார் நகரின் 4 வழிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, தேரா காஜிகானில் டிசம்பர் 19-ம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், எனவே யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என போலீஸார் எச்சரித்திருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும், பலூச் மக்களை கொல்வதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அரச பயங்கரவாதம் தொடருவதை அனுமதிக்க முடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.

Tags: pakistanprotestgenocidebaloch people
ShareTweetSendShare
Previous Post

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

மக்கள் வெள்ளத்தில் தவிக்கும்போது, டெல்லியில் என்ன வேலை?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies