இனப்படுகொலை: பலூச் இன மக்கள் போராட்டம்!
Jul 23, 2025, 01:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனப்படுகொலை: பலூச் இன மக்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் பலூச் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, தேரா காஜிகான் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் நாடு ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமலும் இருந்து வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் நாட்டுக்கு மற்றொரு நெருக்கடியாக இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, பலூச் மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இப்போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் பலூச் போராளிகள் காணாமல் போவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆகவே, தங்களுக்கு எதிராக அரசே தீவிரவாத அமைப்பு போல செயல்படுவதாக பலூச் மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் மேற்கண்ட நடவடிக்கையைக் கண்டித்து பலுசிஸ்தானின் தேரா காஜிகான் நகரில் ஏராளமான பலூச் மக்கள் திரண்டு மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பலூச் ஒற்றுமைக் குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பலரும் தங்களது கைகளில் காணாமல் போன தங்களது குடும்பத்தைச் சேர்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பலூச் யாக்ஜேட்டி கவுன்சில் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது தேரா காஜிகானில் போலீஸார் தடியடி நடத்தியதாகவும், 2 பெண்கள் உட்பட 20 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு யாருக்கும் தெரியாத இடத்தில் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் போராட்டக் குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அக்கவுன்சில் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “தேரா காஜிகானில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இப்போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கில் போலீஸார் நகரின் 4 வழிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, தேரா காஜிகானில் டிசம்பர் 19-ம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், எனவே யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என போலீஸார் எச்சரித்திருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும், பலூச் மக்களை கொல்வதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அரச பயங்கரவாதம் தொடருவதை அனுமதிக்க முடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.

Tags: pakistanprotestgenocidebaloch people
ShareTweetSendShare
Previous Post

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

மக்கள் வெள்ளத்தில் தவிக்கும்போது, டெல்லியில் என்ன வேலை?

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies