இனப்படுகொலை: பலூச் இன மக்கள் போராட்டம்!
Sep 13, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனப்படுகொலை: பலூச் இன மக்கள் போராட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 05:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானில் பலூச் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, தேரா காஜிகான் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் நாடு ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமலும் இருந்து வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் நாட்டுக்கு மற்றொரு நெருக்கடியாக இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, பலூச் மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இப்போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் பலூச் போராளிகள் காணாமல் போவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆகவே, தங்களுக்கு எதிராக அரசே தீவிரவாத அமைப்பு போல செயல்படுவதாக பலூச் மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் மேற்கண்ட நடவடிக்கையைக் கண்டித்து பலுசிஸ்தானின் தேரா காஜிகான் நகரில் ஏராளமான பலூச் மக்கள் திரண்டு மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பலூச் ஒற்றுமைக் குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பலரும் தங்களது கைகளில் காணாமல் போன தங்களது குடும்பத்தைச் சேர்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பலூச் யாக்ஜேட்டி கவுன்சில் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது தேரா காஜிகானில் போலீஸார் தடியடி நடத்தியதாகவும், 2 பெண்கள் உட்பட 20 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு யாருக்கும் தெரியாத இடத்தில் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் போராட்டக் குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அக்கவுன்சில் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “தேரா காஜிகானில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இப்போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கில் போலீஸார் நகரின் 4 வழிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, தேரா காஜிகானில் டிசம்பர் 19-ம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், எனவே யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என போலீஸார் எச்சரித்திருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும், பலூச் மக்களை கொல்வதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அரச பயங்கரவாதம் தொடருவதை அனுமதிக்க முடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.

Tags: pakistanprotestgenocidebaloch people
Share
Tweet
SendShare
Previous Post

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

மக்கள் வெள்ளத்தில் தவிக்கும்போது, டெல்லியில் என்ன வேலை?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies