தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வோடு கல்வி நிறுவனங்கள் முன்னேற வேண்டும்!
Jan 13, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வோடு கல்வி நிறுவனங்கள் முன்னேற வேண்டும்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் செயல்படும் நிறுவனங்கள், ஒட்டுமொத்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கும் உணர்வோடு முன்னேற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 6 நாள் பயணமாக மேற்குவங்கம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். முதல்நாள், மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

தொடர்ந்து, கடந்த 4 தினங்களாக தெலங்கானாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற எம்.என்.ஆர். கல்வி அறக்கட்டளையின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், “நல்ல கல்வி முன்னேற்றத்தின் கதவுகளைத் திறக்கிறது.

அதேபோல, நல்ல ஆரோக்கியம் ஒருவரை வாழ்க்கையில் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஆகவே, கிராம மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ வசதிகளில் நிறுவனங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கல்வி மற்றும் சுகாதார சேவைகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவது அவசியம்.

உலகின் அறிவுப் பொருளாதாரத்தில் நாடு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் உள்ள தொழில்துறை, குறிப்பாக ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் திறமையான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், உலகம் முழுவதும் நாட்டின் நற்பெயருக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

எம்.என்.ஆர். அறக்கட்டளை போன்ற கல்வி நிறுவனங்கள் தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பெண்களின் கல்வி மேம்பாடு மற்றும் சுகாதார நலனுக்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில், தெலங்கானா மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அனசுயா சிதக்கா மற்றும் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் எம்.என்.ராஜு, துணைத் தலைவர் ரவிவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Droupadi MurmuPresidentTelangana
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 78 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு!

Next Post

நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகள் :  மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies