தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வோடு கல்வி நிறுவனங்கள் முன்னேற வேண்டும்!
Sep 13, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வோடு கல்வி நிறுவனங்கள் முன்னேற வேண்டும்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 03:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் செயல்படும் நிறுவனங்கள், ஒட்டுமொத்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கும் உணர்வோடு முன்னேற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 6 நாள் பயணமாக மேற்குவங்கம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். முதல்நாள், மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

தொடர்ந்து, கடந்த 4 தினங்களாக தெலங்கானாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற எம்.என்.ஆர். கல்வி அறக்கட்டளையின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், “நல்ல கல்வி முன்னேற்றத்தின் கதவுகளைத் திறக்கிறது.

அதேபோல, நல்ல ஆரோக்கியம் ஒருவரை வாழ்க்கையில் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஆகவே, கிராம மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ வசதிகளில் நிறுவனங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கல்வி மற்றும் சுகாதார சேவைகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவது அவசியம்.

உலகின் அறிவுப் பொருளாதாரத்தில் நாடு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் உள்ள தொழில்துறை, குறிப்பாக ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் திறமையான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், உலகம் முழுவதும் நாட்டின் நற்பெயருக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

எம்.என்.ஆர். அறக்கட்டளை போன்ற கல்வி நிறுவனங்கள் தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பெண்களின் கல்வி மேம்பாடு மற்றும் சுகாதார நலனுக்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில், தெலங்கானா மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அனசுயா சிதக்கா மற்றும் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் எம்.என்.ராஜு, துணைத் தலைவர் ரவிவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Droupadi MurmuPresidentTelangana
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 78 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு!

Next Post

நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகள் :  மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies