அமலாக்கத்துறை சம்மன்: 2-வது முறையாக புறக்கணித்த கெஜ்ரிவால்!
Mar 15, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை சம்மன்: 2-வது முறையாக புறக்கணித்த கெஜ்ரிவால்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விசாரணைக்காக இன்று ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2-வது முறையாக ஆஜராகாமல் புறக்கணித்திருக்கிறார்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. ஆனால், இது தொடர்பாக தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியதில் லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, டெல்லி துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், இவ்விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய அமலாக்கத் துறை, நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

ஆனால், இது சட்டவிரோதமான விசாரணை எனக் கூறி, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் கெஜ்ரிவால் புறக்கணித்தார். இதையடுத்து, டிசம்பர் 21-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. எனினும், கெஜ்ரிவால் இன்றும் ஆஜராகவில்லை.

ஏற்கெனவே தான் திட்டமிட்டபடி 10 நாள் விபாசனா தியானப் பயிற்சிக்கு சென்று விட்டார். ஆனால், தியானப் பயிற்சிக்காக எங்கு சென்றார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. எனினும், கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலம் சென்றதாகவும், அங்கு அவருக்கு ஆம் ஆத்மி கட்சியினர் வரவேற்பு அளித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதேசமயம், அமலாக்கத் துறை சம்மன் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், சட்ட ரீதியாக பதில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அக்கட்சி கூறியிருக்கிறது. இதனிடையே, புதிய சம்மன் அரசியல் உள்நோக்கம் கொண்டது. சட்ட விரோதமானது.

எனது வாழ்க்கை வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையாக இருக்கிறது. மறைக்க எதுவும் இல்லை. எந்த ஒரு சம்மனையும் சட்டபூர்வமாக சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: delhiEnforcement DirectorateCM Aravind Kejriwal
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் இரண்டாயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

Next Post

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை – 32 பேர் உயிரிழப்பு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies