பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட உ.பி. வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்த ஹோஷியார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாத் யாதவ். இவர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களைக் கூறி, வீடியோ வெளியிட்டு வந்தார்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்கண்ட அவதூறு வீடியோக்களை வெளியிட்டது ஹோஷியார்பூர் ராம்பாத் யாதவ் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போலீஸார் ராம்பாத் யாதவைக் கைது செய்தனர். பின்னர், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ராம்பாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உத்தரப் பிரதேச மாநிலம் ஹோஷியார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்பாத் யாதவ் என்பவர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறி வீடியோ வெளியிட்டு வந்தார்.
அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, காவல்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. ராம்பாத் யாதவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.