காஸா நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்: மிரட்டும் பரூக் அப்துல்லா... பா.ஜ.க. பதிலடி!
Jan 14, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸா நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்: மிரட்டும் பரூக் அப்துல்லா… பா.ஜ.க. பதிலடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 10:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காணப்படவில்லை என்றால், காஸாவுக்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மிரட்டல் விடுத்திருக்கிறார்.

பாகிஸ்தான் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பாகிஸ்தான் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதும், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தாலும், பேச்சுவார்த்தை நடத்துவதுபோல பாசங்கு செய்து பாகிஸ்தான் முதுகில் குத்தி வருகிறது.

இந்த நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி.யும்,  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா தனது அண்டை நாடான பாகிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்தினால்தான், இரு நாடுகளும் வளர்ச்சியடைய முடியும்.

இந்தியாவால் தனது நண்பர்களை மாற்றிக் கொள்ள இயலும். ஆனால், அண்டை நாடுகளை மாற்றிக் கொள்ள இயலாது என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்ப்பாய் கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும்கூட போர் என்பது தீர்வல்ல எனவும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் கூறியிருக்கிறார்.

இந்த சூழலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றியடைய அதிக வாய்ப்பு உள்ளது. அவர், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண விரும்புகிறார். இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காஸா மற்றும் பாலஸ்தீனத்தின் நிலையே இந்தியாவிற்கும் ஏற்படும்” என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் ஹினா ஷபி பட் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வருத்தமளிக்கிறது. பரூக் அப்துல்லா இப்போதே கற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஆட்சி பாகிஸ்தானுக்கு முன்னால் தலைகுனியப் போவதில்லை. நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சித்தோம். ஆனால், அவர்கள் மீண்டும் மீண்டும் எங்களை முதுகில் குத்தியுள்ளனர்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

Tags: IndiapakistanThreatenFaruk Abdulla
ShareTweetSendShare
Previous Post

நடிகை ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த ஆந்திர முதல்வர்!

Next Post

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies