காஸா நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்: மிரட்டும் பரூக் அப்துல்லா... பா.ஜ.க. பதிலடி!
Apr 29, 2026, 12:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸா நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்: மிரட்டும் பரூக் அப்துல்லா… பா.ஜ.க. பதிலடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 10:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காணப்படவில்லை என்றால், காஸாவுக்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மிரட்டல் விடுத்திருக்கிறார்.

பாகிஸ்தான் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பாகிஸ்தான் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதும், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தாலும், பேச்சுவார்த்தை நடத்துவதுபோல பாசங்கு செய்து பாகிஸ்தான் முதுகில் குத்தி வருகிறது.

இந்த நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி.யும்,  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா தனது அண்டை நாடான பாகிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்தினால்தான், இரு நாடுகளும் வளர்ச்சியடைய முடியும்.

இந்தியாவால் தனது நண்பர்களை மாற்றிக் கொள்ள இயலும். ஆனால், அண்டை நாடுகளை மாற்றிக் கொள்ள இயலாது என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்ப்பாய் கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும்கூட போர் என்பது தீர்வல்ல எனவும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் கூறியிருக்கிறார்.

இந்த சூழலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றியடைய அதிக வாய்ப்பு உள்ளது. அவர், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண விரும்புகிறார். இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காஸா மற்றும் பாலஸ்தீனத்தின் நிலையே இந்தியாவிற்கும் ஏற்படும்” என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் ஹினா ஷபி பட் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வருத்தமளிக்கிறது. பரூக் அப்துல்லா இப்போதே கற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஆட்சி பாகிஸ்தானுக்கு முன்னால் தலைகுனியப் போவதில்லை. நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சித்தோம். ஆனால், அவர்கள் மீண்டும் மீண்டும் எங்களை முதுகில் குத்தியுள்ளனர்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

Tags: IndiapakistanThreatenFaruk Abdulla
ShareTweetSendShare
Previous Post

நடிகை ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த ஆந்திர முதல்வர்!

Next Post

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies