கூடங்குளம் அணுமின் நிலையம்: இந்தியா - ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம்!
Jul 25, 2025, 08:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையம்: இந்தியா – ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
Dec 27, 2023, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் அலகுகள் தொடர்பாக இந்தியா – ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், 5 நாள் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யா சென்றார். 29-ம் தேதி வரை ரஷ்யாவில் இருக்கும் ஜெய்சங்கர், ரஷ்ய பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்றும், இப்பயணத்தின்போது ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாஸ்கோ சென்ற ஜெய்சங்கர், ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவை சந்தித்து உரையாடினார். அப்போது, அணுசக்தி மற்றும் மருந்துகள், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

மேலும், ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஆகவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் மின் உற்பத்தி அலகுகள் அமைப்பது தொடர்பான சில முக்கியமான ஒப்பந்தங்களிலும் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டிருக்கின்றன.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஜெய்சங்கர் மற்றும் ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் ஆகியோருக்கு இடையே விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெய்சங்கர், “இன்று எனது முன்னிலையிலும், துணை பிரதமர் மந்துரோவ் முன்னிலையிலும், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்க்ததில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மந்துரோவுடனான சந்திப்பில் வர்த்தகம், நிதி, இணைப்பு, எரிசக்தி, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் அணுசக்தி களங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.

புதிய வாய்ப்புகளை ஆராய்வதில் அதிக கவனம் செலுத்துவது பாராட்டப்பட்டது. பல்வேறு பரிமாணங்களில் எங்களது ஒத்துழைப்பை மிகவும் சீரானதாகவும் நிலையானதாகவும் ஆக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் தூத்துக்குடியில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம், ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. அணுமின் நிலையத்தின் முதல் மின் அலகு 1,000 மெகாவாட் வடிவமைப்பு திறனுடன் பிப்ரவரி 2016-ல் செயல்படத் தொடங்கியது.

தொடர்ந்து,1,000 மெகாவாட் திறனுடன் 2-வது அலகு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், 4 அலுகுகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் 2027-ம் நிறைவடையும் என்றும், அதன் பிறகு கூடங்குளம் அனுமின் நிலையத்தில் 6,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று அணுசக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: EAM S JaishankarDenis ManturovRussia deputy PMrussia
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம்!

Next Post

”பாரத்”அரிசி ஒரு கிலோ ரூ.25! – மத்திய அரசு

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies