கூடங்குளம் அணுமின் நிலையம்: இந்தியா - ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம்!
Jan 14, 2026, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையம்: இந்தியா – ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் அலகுகள் தொடர்பாக இந்தியா – ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், 5 நாள் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யா சென்றார். 29-ம் தேதி வரை ரஷ்யாவில் இருக்கும் ஜெய்சங்கர், ரஷ்ய பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்றும், இப்பயணத்தின்போது ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாஸ்கோ சென்ற ஜெய்சங்கர், ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவை சந்தித்து உரையாடினார். அப்போது, அணுசக்தி மற்றும் மருந்துகள், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

மேலும், ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஆகவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் மின் உற்பத்தி அலகுகள் அமைப்பது தொடர்பான சில முக்கியமான ஒப்பந்தங்களிலும் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டிருக்கின்றன.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஜெய்சங்கர் மற்றும் ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் ஆகியோருக்கு இடையே விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெய்சங்கர், “இன்று எனது முன்னிலையிலும், துணை பிரதமர் மந்துரோவ் முன்னிலையிலும், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்க்ததில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மந்துரோவுடனான சந்திப்பில் வர்த்தகம், நிதி, இணைப்பு, எரிசக்தி, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் அணுசக்தி களங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.

புதிய வாய்ப்புகளை ஆராய்வதில் அதிக கவனம் செலுத்துவது பாராட்டப்பட்டது. பல்வேறு பரிமாணங்களில் எங்களது ஒத்துழைப்பை மிகவும் சீரானதாகவும் நிலையானதாகவும் ஆக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் தூத்துக்குடியில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம், ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. அணுமின் நிலையத்தின் முதல் மின் அலகு 1,000 மெகாவாட் வடிவமைப்பு திறனுடன் பிப்ரவரி 2016-ல் செயல்படத் தொடங்கியது.

தொடர்ந்து,1,000 மெகாவாட் திறனுடன் 2-வது அலகு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், 4 அலுகுகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் 2027-ம் நிறைவடையும் என்றும், அதன் பிறகு கூடங்குளம் அனுமின் நிலையத்தில் 6,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று அணுசக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: russiaEAM S JaishankarDenis ManturovRussia deputy PM
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம்!

Next Post

”பாரத்”அரிசி ஒரு கிலோ ரூ.25! – மத்திய அரசு

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies