கூடங்குளம் அணுமின் நிலையம்: இந்தியா - ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம்!
Jul 28, 2026, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையம்: இந்தியா – ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் அலகுகள் தொடர்பாக இந்தியா – ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், 5 நாள் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யா சென்றார். 29-ம் தேதி வரை ரஷ்யாவில் இருக்கும் ஜெய்சங்கர், ரஷ்ய பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்றும், இப்பயணத்தின்போது ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாஸ்கோ சென்ற ஜெய்சங்கர், ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவை சந்தித்து உரையாடினார். அப்போது, அணுசக்தி மற்றும் மருந்துகள், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

மேலும், ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஆகவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் மின் உற்பத்தி அலகுகள் அமைப்பது தொடர்பான சில முக்கியமான ஒப்பந்தங்களிலும் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டிருக்கின்றன.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஜெய்சங்கர் மற்றும் ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் ஆகியோருக்கு இடையே விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெய்சங்கர், “இன்று எனது முன்னிலையிலும், துணை பிரதமர் மந்துரோவ் முன்னிலையிலும், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்க்ததில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மந்துரோவுடனான சந்திப்பில் வர்த்தகம், நிதி, இணைப்பு, எரிசக்தி, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் அணுசக்தி களங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.

புதிய வாய்ப்புகளை ஆராய்வதில் அதிக கவனம் செலுத்துவது பாராட்டப்பட்டது. பல்வேறு பரிமாணங்களில் எங்களது ஒத்துழைப்பை மிகவும் சீரானதாகவும் நிலையானதாகவும் ஆக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் தூத்துக்குடியில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம், ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. அணுமின் நிலையத்தின் முதல் மின் அலகு 1,000 மெகாவாட் வடிவமைப்பு திறனுடன் பிப்ரவரி 2016-ல் செயல்படத் தொடங்கியது.

தொடர்ந்து,1,000 மெகாவாட் திறனுடன் 2-வது அலகு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், 4 அலுகுகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் 2027-ம் நிறைவடையும் என்றும், அதன் பிறகு கூடங்குளம் அனுமின் நிலையத்தில் 6,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று அணுசக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: russiaEAM S JaishankarDenis ManturovRussia deputy PM
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம்!

Next Post

”பாரத்”அரிசி ஒரு கிலோ ரூ.25! – மத்திய அரசு

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies