ஆயுத வியாபாரி வழக்கின் குற்றப்பத்திரிகையில் ராபர்ட் வதேரா பெயர்!
Aug 19, 2025, 10:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுத வியாபாரி வழக்கின் குற்றப்பத்திரிகையில் ராபர்ட் வதேரா பெயர்!

Web Desk by Web Desk
Dec 27, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு சொத்து விவகாரங்களை மறைத்தது தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை முதல் முறையாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவின் பெயரை பயன்படுத்தி இருக்கிறது.

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி, வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும், வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்காமல் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இதையறிந்த சஞ்சய் பண்டாரி, கடந்த 2016-ம் ஆண்டு பிரிட்டனுக்குத் தப்பியோடி விட்டார். இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி இந்திய அரசு அழுத்தம் கொடுத்து வந்தது. இதைத் தொடர்ந்து, சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில், இவ்வழக்கில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இதில்தான் தலைமறைவான ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியிடம் பணிபுரிந்த சி.சி. தம்பி, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ராவின் நெருங்கிய உதவியாளர் என்று குறிப்பிட்டிருக்கிறது.

இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர் சி.சி.தம்பி, பிரிட்டனைச் சேர்ந்த சுமித் சத்தா ஆகியோருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிசி தம்பி கடந்த 2020-ல் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார்.

அதேசமயம், ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி, லண்டனில் உள்ள சொத்துகள் உள்பட வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருவாயை மறைத்திருக்கிறார். இவ்வழக்கில் தொடர்புடைய இச்சொத்துகளை மறைக்க சிசி தம்பி மற்றும் சுமித் சத்தா ஆகியோர் உதவி செய்திருக்கிறார்கள்.

மேலும், சிசி தம்பி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் நெருங்கிய கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. வதேரா, லண்டனில் உள்ள 12 பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள சொத்தை சுமித் சத்தா மூலம் புதுப்பித்ததோடு மட்டுமல்லாமல், அதே இடத்தில் தங்கியிருந்தார்.

தவிர, ராபர்ட் வதேராவும், சிசி தம்பியும் இணைந்து டெல்லிக்கு அருகேயுள்ள ஃபரிதாபாத்தில் ஒரு பெரிய நிலத்தை வாங்கி, ஒருவருக்கொருவர் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இந்த வழக்கில் முதல் முறையாக வதேராவின் பெயா் சோ்க்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இது தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே வதேராவிடம் விசாரணை நடத்தியபோது, அக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கு தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், “குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சிசி தம்பி மற்றும் சத்தாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத சத்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது” என்றனர்.

Tags: PMLA caseIncludeRobert Vadra NameEnforcement Directorate
ShareTweetSendShare
Previous Post

எண்ணூர் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளதா?- அண்ணாமலை கேள்வி

Next Post

இந்திய – நேபாள எல்லையில் தீவிர கண்காணிப்பு!

Related News

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies