ஆயுத வியாபாரி வழக்கின் குற்றப்பத்திரிகையில் ராபர்ட் வதேரா பெயர்!
Mar 19, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுத வியாபாரி வழக்கின் குற்றப்பத்திரிகையில் ராபர்ட் வதேரா பெயர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு சொத்து விவகாரங்களை மறைத்தது தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை முதல் முறையாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவின் பெயரை பயன்படுத்தி இருக்கிறது.

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி, வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும், வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்காமல் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இதையறிந்த சஞ்சய் பண்டாரி, கடந்த 2016-ம் ஆண்டு பிரிட்டனுக்குத் தப்பியோடி விட்டார். இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி இந்திய அரசு அழுத்தம் கொடுத்து வந்தது. இதைத் தொடர்ந்து, சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில், இவ்வழக்கில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இதில்தான் தலைமறைவான ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியிடம் பணிபுரிந்த சி.சி. தம்பி, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ராவின் நெருங்கிய உதவியாளர் என்று குறிப்பிட்டிருக்கிறது.

இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர் சி.சி.தம்பி, பிரிட்டனைச் சேர்ந்த சுமித் சத்தா ஆகியோருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிசி தம்பி கடந்த 2020-ல் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார்.

அதேசமயம், ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி, லண்டனில் உள்ள சொத்துகள் உள்பட வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருவாயை மறைத்திருக்கிறார். இவ்வழக்கில் தொடர்புடைய இச்சொத்துகளை மறைக்க சிசி தம்பி மற்றும் சுமித் சத்தா ஆகியோர் உதவி செய்திருக்கிறார்கள்.

மேலும், சிசி தம்பி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் நெருங்கிய கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. வதேரா, லண்டனில் உள்ள 12 பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள சொத்தை சுமித் சத்தா மூலம் புதுப்பித்ததோடு மட்டுமல்லாமல், அதே இடத்தில் தங்கியிருந்தார்.

தவிர, ராபர்ட் வதேராவும், சிசி தம்பியும் இணைந்து டெல்லிக்கு அருகேயுள்ள ஃபரிதாபாத்தில் ஒரு பெரிய நிலத்தை வாங்கி, ஒருவருக்கொருவர் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இந்த வழக்கில் முதல் முறையாக வதேராவின் பெயா் சோ்க்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இது தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே வதேராவிடம் விசாரணை நடத்தியபோது, அக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கு தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், “குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சிசி தம்பி மற்றும் சத்தாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத சத்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது” என்றனர்.

Tags: Enforcement DirectoratePMLA caseIncludeRobert Vadra Name
ShareTweetSendShare
Previous Post

எண்ணூர் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளதா?- அண்ணாமலை கேள்வி

Next Post

இந்திய – நேபாள எல்லையில் தீவிர கண்காணிப்பு!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies