ஆயுத வியாபாரி வழக்கின் குற்றப்பத்திரிகையில் ராபர்ட் வதேரா பெயர்!
Aug 12, 2026, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுத வியாபாரி வழக்கின் குற்றப்பத்திரிகையில் ராபர்ட் வதேரா பெயர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 03:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு சொத்து விவகாரங்களை மறைத்தது தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை முதல் முறையாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவின் பெயரை பயன்படுத்தி இருக்கிறது.

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி, வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும், வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்காமல் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இதையறிந்த சஞ்சய் பண்டாரி, கடந்த 2016-ம் ஆண்டு பிரிட்டனுக்குத் தப்பியோடி விட்டார். இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி இந்திய அரசு அழுத்தம் கொடுத்து வந்தது. இதைத் தொடர்ந்து, சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில், இவ்வழக்கில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இதில்தான் தலைமறைவான ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியிடம் பணிபுரிந்த சி.சி. தம்பி, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ராவின் நெருங்கிய உதவியாளர் என்று குறிப்பிட்டிருக்கிறது.

இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர் சி.சி.தம்பி, பிரிட்டனைச் சேர்ந்த சுமித் சத்தா ஆகியோருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிசி தம்பி கடந்த 2020-ல் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார்.

அதேசமயம், ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி, லண்டனில் உள்ள சொத்துகள் உள்பட வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருவாயை மறைத்திருக்கிறார். இவ்வழக்கில் தொடர்புடைய இச்சொத்துகளை மறைக்க சிசி தம்பி மற்றும் சுமித் சத்தா ஆகியோர் உதவி செய்திருக்கிறார்கள்.

மேலும், சிசி தம்பி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் நெருங்கிய கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. வதேரா, லண்டனில் உள்ள 12 பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள சொத்தை சுமித் சத்தா மூலம் புதுப்பித்ததோடு மட்டுமல்லாமல், அதே இடத்தில் தங்கியிருந்தார்.

தவிர, ராபர்ட் வதேராவும், சிசி தம்பியும் இணைந்து டெல்லிக்கு அருகேயுள்ள ஃபரிதாபாத்தில் ஒரு பெரிய நிலத்தை வாங்கி, ஒருவருக்கொருவர் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இந்த வழக்கில் முதல் முறையாக வதேராவின் பெயா் சோ்க்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இது தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே வதேராவிடம் விசாரணை நடத்தியபோது, அக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கு தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், “குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சிசி தம்பி மற்றும் சத்தாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத சத்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது” என்றனர்.

Tags: Enforcement DirectoratePMLA caseIncludeRobert Vadra Name
Share
Tweet
SendShare
Previous Post

எண்ணூர் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளதா?- அண்ணாமலை கேள்வி

Next Post

இந்திய – நேபாள எல்லையில் தீவிர கண்காணிப்பு!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies