இந்திய - நேபாள எல்லையில் தீவிர கண்காணிப்பு!
Jun 28, 2026, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய – நேபாள எல்லையில் தீவிர கண்காணிப்பு!

பிரதமரின் அயோத்தி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் அயோத்தி வருகையை முன்னிட்டு இந்திய நேபாள எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அயோத்தியில் விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அயோத்தி விமான நிலையத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி முதல் விமானப்போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு,சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளது. புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இதனையடுத்து அயோத்தி மற்றும் இந்திய நேபாள எல்லையில் பாதுகாப்பு  அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச காவல்துறை மற்றும் மத்திய  உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லை வழியாக செல்ல அனுமதிக்கும் முன் அவர்களை பற்றிய முழு  விவரங்களை  கண்டறிய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதான சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்தோ-நேபாள எல்லைக் காவல் துறை, உள்ளூர் புலனாய்வுப் பிரிவு (எல்ஐயு) மற்றும் உளவுத்துறை அமைப்புகள்  எல்லையில் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அகிலேஷ்வர் சிங் கூறினார்.

நேபாள எல்லையை ஒட்டிய மஹராஜ்கஞ்ச்,சித்தார்த்த  நகர், ஷ்ரவஸ்தி மற்றும் பல்ராம்பூர் மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Ramar TempleIndo-Nepal borderPM Modi's Ayodhya visitsecurity agenciessri ram airport
ShareTweetSendShare
Previous Post

ஆயுத வியாபாரி வழக்கின் குற்றப்பத்திரிகையில் ராபர்ட் வதேரா பெயர்!

Next Post

மருத்துவர்கள் அனைவரும் உடல், மன, ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும்!

Related News

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

அமைச்சர்களுக்கு எதிராக சபரீசன் நோட்டீஸ்; காரணம் என்ன ?

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies