தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி: பப்புவா நியூ கினியா பிரதமர்!
Jun 7, 2025, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி: பப்புவா நியூ கினியா பிரதமர்!

Web Desk by Web Desk
Dec 29, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு நியூ பிரிட்டனில் உலவுன் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவிகளை விரைவாக அனுப்பிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் நன்றி தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு பப்புவா நியூ கினியாவை மிகப்பெரிய பூகம்பம் உலுக்கி எடுத்தது. அப்போது, அந்நாட்டுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா அரசு அனுப்பு வைத்தது.

அதேபோல, 2019-ம் ஆண்டு பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அப்போது, பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அப்போதும், அந்நாட்டுக்கு இந்தியா உதவியது.

இந்த நிலையில், பப்புவா நியூ கினியாவின் உலவுன் மலையில் உள்ள ஒரு பெரிய எரிமலை கடந்த நவம்பர் 20-ம் தேதியன்று வெடித்தது. இதில், 26,000-க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டன.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, 1 மில்லியன் டாலர் மதிப்பிலான சுமார் 11 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களையும், 6 டன் மருத்துவ உதவிகளையும் அனுப்பி வைத்தது. இந்த நிவாரண உதவியை இந்திய உயர் ஆணையரின் முதன்மைச் செயலாளர் ரவீந்திர நாத், பப்புவா நியூ கினியா அரசிடம் ஒப்படைத்தார்.

இந்த பேரிடர் நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், தூங்கும் பாய்கள், சுகாதாரக் கருவிகள், உணவுகள் மற்றும் தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் ஆகியவை அடங்கும். அதேசமயம், மருத்துவ உதவியில் அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள் மற்றும் சானிட்டரி பேட்கள் அடங்கும்.

இந்த நிலையில், இந்தியா அனுப்பி இருக்கும் மனிதாபிமான உதவிக்கு பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப், பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஜேம்ஸ் மராப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எனது உதவிக்கான கோரிக்கையை பெற்ற குறுகிய காலத்திற்குள், தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி.

இது மேற்கு நியூ பிரிட்டனில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது, மேலும், நட்பு மற்றும் கூட்டாண்மையின் உணர்வுகளை எதிரொலிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு மே மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா சென்றார். அப்போது, அவரை விமான நிலையத்தில் வரவேற்ற ​பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராப், மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: ThanksPapua New GuineaPM James MarapePM Modi
ShareTweetSendShare
Previous Post

2030-க்குள் இந்தியாவில் 300 விமான நிலையங்கள்: ஜோதிராதித்ய சிந்தியா!

Next Post

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா 50 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்! – இஸ்ரோ

Related News

இழப்பீடு தொகை செலுத்துங்கள் : சென்னை உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக அலைமோதிய மக்கள் கூட்டம்!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

Load More

அண்மைச் செய்திகள்

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!

ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

ஸ்கை லிஃப்ட் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை!

கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற டாம் குரூஸ்!

வாழ்வின் ஒவ்வொரு கணமும் இசைஞானியின் இசை – அண்ணாமலை புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies