தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி: பப்புவா நியூ கினியா பிரதமர்!
Jul 25, 2025, 07:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி: பப்புவா நியூ கினியா பிரதமர்!

Web Desk by Web Desk
Dec 29, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு நியூ பிரிட்டனில் உலவுன் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவிகளை விரைவாக அனுப்பிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் நன்றி தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு பப்புவா நியூ கினியாவை மிகப்பெரிய பூகம்பம் உலுக்கி எடுத்தது. அப்போது, அந்நாட்டுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா அரசு அனுப்பு வைத்தது.

அதேபோல, 2019-ம் ஆண்டு பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அப்போது, பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அப்போதும், அந்நாட்டுக்கு இந்தியா உதவியது.

இந்த நிலையில், பப்புவா நியூ கினியாவின் உலவுன் மலையில் உள்ள ஒரு பெரிய எரிமலை கடந்த நவம்பர் 20-ம் தேதியன்று வெடித்தது. இதில், 26,000-க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டன.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, 1 மில்லியன் டாலர் மதிப்பிலான சுமார் 11 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களையும், 6 டன் மருத்துவ உதவிகளையும் அனுப்பி வைத்தது. இந்த நிவாரண உதவியை இந்திய உயர் ஆணையரின் முதன்மைச் செயலாளர் ரவீந்திர நாத், பப்புவா நியூ கினியா அரசிடம் ஒப்படைத்தார்.

இந்த பேரிடர் நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், தூங்கும் பாய்கள், சுகாதாரக் கருவிகள், உணவுகள் மற்றும் தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் ஆகியவை அடங்கும். அதேசமயம், மருத்துவ உதவியில் அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள் மற்றும் சானிட்டரி பேட்கள் அடங்கும்.

இந்த நிலையில், இந்தியா அனுப்பி இருக்கும் மனிதாபிமான உதவிக்கு பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப், பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஜேம்ஸ் மராப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எனது உதவிக்கான கோரிக்கையை பெற்ற குறுகிய காலத்திற்குள், தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி.

இது மேற்கு நியூ பிரிட்டனில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது, மேலும், நட்பு மற்றும் கூட்டாண்மையின் உணர்வுகளை எதிரொலிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு மே மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா சென்றார். அப்போது, அவரை விமான நிலையத்தில் வரவேற்ற ​பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராப், மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiThanksPapua New GuineaPM James Marape
ShareTweetSendShare
Previous Post

2030-க்குள் இந்தியாவில் 300 விமான நிலையங்கள்: ஜோதிராதித்ய சிந்தியா!

Next Post

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா 50 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்! – இஸ்ரோ

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies