தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி: பப்புவா நியூ கினியா பிரதமர்!
Mar 15, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி: பப்புவா நியூ கினியா பிரதமர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 29, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு நியூ பிரிட்டனில் உலவுன் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவிகளை விரைவாக அனுப்பிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் நன்றி தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு பப்புவா நியூ கினியாவை மிகப்பெரிய பூகம்பம் உலுக்கி எடுத்தது. அப்போது, அந்நாட்டுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா அரசு அனுப்பு வைத்தது.

அதேபோல, 2019-ம் ஆண்டு பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அப்போது, பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அப்போதும், அந்நாட்டுக்கு இந்தியா உதவியது.

இந்த நிலையில், பப்புவா நியூ கினியாவின் உலவுன் மலையில் உள்ள ஒரு பெரிய எரிமலை கடந்த நவம்பர் 20-ம் தேதியன்று வெடித்தது. இதில், 26,000-க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டன.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, 1 மில்லியன் டாலர் மதிப்பிலான சுமார் 11 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களையும், 6 டன் மருத்துவ உதவிகளையும் அனுப்பி வைத்தது. இந்த நிவாரண உதவியை இந்திய உயர் ஆணையரின் முதன்மைச் செயலாளர் ரவீந்திர நாத், பப்புவா நியூ கினியா அரசிடம் ஒப்படைத்தார்.

இந்த பேரிடர் நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், தூங்கும் பாய்கள், சுகாதாரக் கருவிகள், உணவுகள் மற்றும் தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் ஆகியவை அடங்கும். அதேசமயம், மருத்துவ உதவியில் அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள் மற்றும் சானிட்டரி பேட்கள் அடங்கும்.

இந்த நிலையில், இந்தியா அனுப்பி இருக்கும் மனிதாபிமான உதவிக்கு பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப், பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஜேம்ஸ் மராப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எனது உதவிக்கான கோரிக்கையை பெற்ற குறுகிய காலத்திற்குள், தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி.

இது மேற்கு நியூ பிரிட்டனில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது, மேலும், நட்பு மற்றும் கூட்டாண்மையின் உணர்வுகளை எதிரொலிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு மே மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா சென்றார். அப்போது, அவரை விமான நிலையத்தில் வரவேற்ற ​பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராப், மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiThanksPapua New GuineaPM James Marape
ShareTweetSendShare
Previous Post

2030-க்குள் இந்தியாவில் 300 விமான நிலையங்கள்: ஜோதிராதித்ய சிந்தியா!

Next Post

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா 50 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்! – இஸ்ரோ

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies