தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி: பப்புவா நியூ கினியா பிரதமர்!
Jul 29, 2026, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி: பப்புவா நியூ கினியா பிரதமர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 29, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு நியூ பிரிட்டனில் உலவுன் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவிகளை விரைவாக அனுப்பிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் நன்றி தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு பப்புவா நியூ கினியாவை மிகப்பெரிய பூகம்பம் உலுக்கி எடுத்தது. அப்போது, அந்நாட்டுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா அரசு அனுப்பு வைத்தது.

அதேபோல, 2019-ம் ஆண்டு பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அப்போது, பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அப்போதும், அந்நாட்டுக்கு இந்தியா உதவியது.

இந்த நிலையில், பப்புவா நியூ கினியாவின் உலவுன் மலையில் உள்ள ஒரு பெரிய எரிமலை கடந்த நவம்பர் 20-ம் தேதியன்று வெடித்தது. இதில், 26,000-க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டன.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, 1 மில்லியன் டாலர் மதிப்பிலான சுமார் 11 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களையும், 6 டன் மருத்துவ உதவிகளையும் அனுப்பி வைத்தது. இந்த நிவாரண உதவியை இந்திய உயர் ஆணையரின் முதன்மைச் செயலாளர் ரவீந்திர நாத், பப்புவா நியூ கினியா அரசிடம் ஒப்படைத்தார்.

இந்த பேரிடர் நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், தூங்கும் பாய்கள், சுகாதாரக் கருவிகள், உணவுகள் மற்றும் தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் ஆகியவை அடங்கும். அதேசமயம், மருத்துவ உதவியில் அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள் மற்றும் சானிட்டரி பேட்கள் அடங்கும்.

இந்த நிலையில், இந்தியா அனுப்பி இருக்கும் மனிதாபிமான உதவிக்கு பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப், பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஜேம்ஸ் மராப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எனது உதவிக்கான கோரிக்கையை பெற்ற குறுகிய காலத்திற்குள், தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி.

இது மேற்கு நியூ பிரிட்டனில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது, மேலும், நட்பு மற்றும் கூட்டாண்மையின் உணர்வுகளை எதிரொலிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு மே மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா சென்றார். அப்போது, அவரை விமான நிலையத்தில் வரவேற்ற ​பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராப், மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiThanksPapua New GuineaPM James Marape
ShareTweetSendShare
Previous Post

2030-க்குள் இந்தியாவில் 300 விமான நிலையங்கள்: ஜோதிராதித்ய சிந்தியா!

Next Post

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா 50 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்! – இஸ்ரோ

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies