விஜயகாந்தை புகழ்ந்த பிரதமர் மோடி: இறுகிய முகத்துடன் ஸ்டாலின்!
Mar 15, 2026, 12:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயகாந்தை புகழ்ந்த பிரதமர் மோடி: இறுகிய முகத்துடன் ஸ்டாலின்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 2, 2024, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தைப் பற்றி பிரதமர் மோடி புகழ்ந்து தள்ளிய நிலையில், ஸ்டாலின் முகத்தில் ஈயாடவில்லை. இறுகிய முகத்துடனேயே காணப்பட்டார்.

ஏன் தெரியுமா?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அந்த வகையில், காலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிரதமர், பிற்பகலில் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தையும் திறந்து வைத்தார்.

பிரதமர் கலந்துகொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டனர். அந்த வகையில், திருச்சி விமான நிலைய புதிய முனையும் திறப்பு விழாவில் ஸ்டாலினுடன், தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “விஜயகாந்தை நாம் இழந்திருக்கிறோம். விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன்தான். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த்.

திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே முன்னிறுத்தினார். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று புகழ்ந்து தள்ளினார்.

பிரதமர் மோடி, இப்படி விஜயகாந்தை புகழ்ந்ததும் ஸ்டாலின் முகத்தில் ஈயாடவில்லை. இறுகிய முகத்துடன் காணப்பட்டார். ஸ்டாலின் மட்டுமல்ல, அவருடன் வந்திருந்த அமைச்சர்களும் படு அப்செட். காரணம், விஜயகாந்துக்கு தி.மு.க. தலைமை செய்த கெடுதல்கள் அவ்வளவு.

இதில் முதலாவதாக, சென்னை கோயம்பேடு பகுதியில் 1 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக ஆண்டாள் அழகர் என்கிற பெயரில் திருமண மண்டபத்தை விஜயகாந்த் கட்டியிருந்தார். இந்த சூழலில், கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க. என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

பின்னர், 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் எதிர்த்து தனியாக நின்றார். இத்தேர்தலில் 8.4 சதவீத வாக்குகள் விஜயகாந்த் கட்சி பெற்றது. இதனால், அரண்டுபோன அப்போதைய தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி, மேம்பாலம் கட்ட இடம் வேண்டும் என்று கூறி, கடந்த 2007-ம் ஆண்டு விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடித்துத் தள்ளியது. இதன் காரணமாக, 1 ஏக்கர் நிலத்தில் மிஞ்சியது வெறும் 20 சென்ட்தான்.

இதன் பிறகும் தி.மு.க. தலைமை சும்மா இருக்கவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலின்போது காமெடி நடிகர் வடிவேலு உள்ளிட்டோரை ஏவிவிட்டு, விஜயகாந்தை மிகவும் தரக்குறைவாக விமர்சிக்க வைத்தனர். மேலும், விஜயகாந்துக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டபோது, கேலியும், கிண்டலும் செய்தனர். அப்படிப்பட்ட நிலையில், பிரதமர் மோடி விஜயகாந்தை புகழ்ந்ததை ஸ்டாலினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுதான் அவரது இறுக்கத்துக்குக் காரணமாகும்.

Tags: PM Moditrichyairportstalinvijaykanthinaguration
ShareTweetSendShare
Previous Post

பல இலக்குகளைத் தாக்கி அழிக்கும் சீனாவின் புதிய ஆயுதம்!

Next Post

இனி சாலை விபத்தை ஏற்படுத்தினால்! – 10 ஆண்டு சிறை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies